Tuesday, July 10, 2012

சண்டி ஹோமம்

சத்குருவின் திருவருளால் சண்டிகா  ஹோமமும் இதில் உள்ளது.
நன்றி.


http://www.scribd.com/doc/99683508/chandika-havanam

Wednesday, July 4, 2012

தாம்ரபரணி - 8

தாம்ரபரணி - 8
ஸ்ரீ வைகுண்டம் முதல் சங்கமம் வரை
தெற்காக                                                   - சாரதா தீர்த்தம்
                                    தக்ஷிண  வாகினி
தென் கிழக்கு                                             - ஸ்மராள தீர்த்தம்
தென் கிழக்கு                                              - மகா குஸும தீர்த்தம்
தென் கிழக்கு                                              - குஸும வ்ருஷ்டி தீர்த்தம் 
தென் கிழக்கு                                               - சத புத் புத தீர்த்தம்
                                   பூர்வ வாகினி
வட கரை                                        -  காந்தீஸ்வர தீர்த்தம்
எதிராக  தென் கரை                     - ரமா தீர்த்தம் , போகீ தீர்த்தம்,                        சக்ரதீர்த்தம்     முதலியவை ( ஆழ்வார் திருநகரி )
கிழக்காக                                             - நிதி தீர்த்தம்
அதற்கு அப்பால்                               - கால தீர்த்தம்
 அதற்கு அப்பால்                                - நிசா தீர்த்தம்
அதற்கு அப்பால்                                   - சுருதி தீர்த்தம்
அதற்கு அப்பால்                                      - மகர தீர்த்தம்
அதற்கு அப்பால்                                         - கலா தீர்த்தம்
அதற்கு அப்பால்                                         - மங்கள தீர்த்தம்
வட கரை                                                       - ஹர்ஷ தீர்த்தம்
வட கரை                                                      - லக்ஷ்மீ நாராயண தீர்த்தம்
வட கரை                                                  - பித்ரு தீர்த்தம் ( அப்பன் கோவில் )
வட கரை                                                - அச்விநீ தீர்த்தம் ( இரட்டைத் திருப்பதி )
வட கரை                                               - மோகாபக தீர்த்தம் ,
                                                                       முக்தி முத்திரா தீர்த்தம்
                                                                    மதாவள தீர்த்தம் முதலியவை
                                                                           ( பெருங்குளம் )
வட கரை                                                - ஞான தீர்த்தம் ( ஆறுமுக மங்கலம் )
வட கரை                                                 - அக்னி தீர்த்தம் ( அக்கா சாலை )
தென் கரை                                            - வஸ்து தீர்த்தம்
தென் கரை                                           - கங்கா தீர்த்தம் ( சொக்கப் பழங் கரை )
தென் கரை                                          - ஸோம தீர்த்தம் ( ஆற்றூர் )
தென் கரை                                            - சண்டிகா தீர்த்தம் ( சேந்த மங்கலம் )
தென் கரை கிழக்காக                      - வல்லீ தீர்த்தம்
                                                                       ஹர்ஷ  தீர்த்தம்
                                                                     கௌரீ தீர்த்தம்
                                                                       சம்பு நாராயண தீர்த்தம்
                                                                            சங்க ராஜ தீர்த்தம்
வட கரை                                               - அகஸ்திய தீர்த்தம்
                                                                               ஸங்கமேஸ்வர  தீர்த்தம்
அதற்கு கிழக்கு மூவாற்றுக் கடலில்
காயத்ரீ ,   ஸாவித்திரீ, ஸரஸ்வதீ தீர்த்தங்கள் ........

ஸத்குரு  பாதம் துணை .... 

தாம்ரபரணி -7

தாம்ரபரணி -7
சேரன் மகாதேவி முதல் ஸ்ரீ வைகுண்டம் வரை
மார்க்கண்டேய தீர்த்தம் சமீபம் - ரோமச தீர்த்தம் ( கோடக நல்லூர் , பத்தமடை )
அதன் கிழக்கு                                     - தௌர் வாஸ  தீர்த்தம்
                                                                             ( கரி சூழ்ந்த மங்கலம் துறை )
கரி சூழ்ந்த மங்கல துறைக்கு சமீபமாக செவலுக்கு  தென் மேற்கு திசையில் ஸ்ரீ விஷ்ணு பகவான் கலியுக முடிவில் கல்கி அவதாரம் செய்யப் போகிறார்.


அதன் கிழக்கு கரை                   - வைனதேய தீர்த்தம்
                                                                    ( கசாளி நதியின் சங்கமத்தில் )
அதற்கு எதிராக வட கரை            - சாயா தீர்த்தம்
அதன் கீழ்புறம்                                      - காந்தர்வ தீர்த்தம்
அதன் கீழ்புறம்                                   - பானு தீர்த்தம்
அதன் சமீபம்                                          -  பிரபாவ தீர்த்தம் 
அதன் சமீபம்                                         - கெளரி,சரஸ்வதி ,விருஷப தீர்த்தங்கள்
                                                                              ( செவல் )
                                                                        இவ்வளவும் சியாமா நதியின் கூடல் வரை

சியாமா நதியின் கூடல் ( பச்சையாறு )   - மந்திர தீர்த்தம்
அதற்கு வட திசை                                            - க்ஷிப்த புஷ்ப தீர்த்தம்
                                                                                         (சிந்து பூந்துறை)
அருகில்                                                                        - ரிஷி தீர்த்தம் (தருவை )
கீழக் கரையில்                                                   - ஸமிர்த்தி தீர்த்தம்
அதற்கு  வட திசை                                              - தயா தீர்த்தம்
அதற்கு     வட திசை                                       - புஜங்க மோசன தீர்த்தம்
அதற்கு வட திசை                                         - சூசி தீர்த்தம்
கீழக் கரையில்                                              - கேது தீர்த்தம் ,
                                                                                    உஷா தீர்த்தம் ,
                                                                                      ஹலானை தீர்த்தம்

              பூர்வ வாகினி
இராம தீர்த்தம் , ஜடாயு தீர்த்தம் ,ருத்ர பாத தீர்த்தம் ( திருவண்ணாத புரம்  அருவங்குளம் ) பாபவிமோசன தீர்த்தம் ,
                                              அச்ருத தீர்த்தம்
வட கரை                                                          - நதீ ஸ்தம்பன தீர்த்தம்
வட கரை                                                   - பூஷா பதன தீர்த்தம் ( செப்பரை )
வட கரை                                                     - துரிதாபக தீர்த்தம்
வட கரை                                                    - மங்கள தீர்த்தம் ( பாலாமடை )
வட கரை                                                   - மகர லோகித தீர்த்தம்
                    தக்ஷிண  வாகினி
        சித்திரா  சங்கம தீர்த்தம்
விஷ்ணு வனம் ( சீவலப் பேரி )               - கோ தீர்த்தம்
                                                                                    விஷ்ணு தீர்த்தம்
                                                                                  குச ஸ்தம்ப தீர்த்தம்
                                                                               ம்ருத்யுஞ் ஜய தீர்த்தம்
                                                                                  தைத்த ரீய தீர்த்தம்
                                                                                   ராஜ சூய தீர்த்தம்
                                                                        மகா  விரத தீர்த்தம்
ஸா த்திய தீர்த்தம் ,விச்வேதேவ  தீர்த்தம் ,
தசாவதார தீர்த்தம் ( அகரம் ) முதலியவை
தென் கரை                                                -  ஸப்த ரிஷி தீர்த்தம்
தென் கரை                                                  - மாஞ் ஜிஷ்ட தீர்த்தம்
தென் கரை                                                    - போகீ தீர்த்தம்
                          பூர்வ வாகினி
வட கரை                                              - கலச தீர்த்தம் ( ஸ்ரீ வைகுண்டம் )
              

தாம்ரபரணி - 6

தாம்ரபரணி - 6

கல்யாண தீர்த்தம் முதல் பாபவினாசம்  வரை
சிறிது வட கிழக்கில்                              -  நாரத தீர்த்தம்
அதன் வடக்கில்                                       - வருண தீர்த்தம் ( ஐந்தலை அருவி )
அதன் வட திசை                                     - ப்ராசேதஸ தீர்த்தம்
அதன் தெற்கு                                         - தும்புரு தீர்த்தம்
அதன் தெற்கு                                           - பர்வத தீர்த்தம்
பாபவினாசம்                                             - இந்திர கீல  தீர்த்தம்
அதன் வட திசை                                     - த்ரி நதீ சங்கம தீர்த்தம் 
பாபவினாசம்  முதல் கல்லிடைக் குறிச்சி வரை
                   பூர்வ வாகினி
பாபவிநாசத்திற்கு கிழக்கில் ( வட கரை ) - தீப தீர்த்தம்
அதன் கிழக்கு                                                        - சாலா  தீர்த்தம்
                                                                                     ( விக்கிரம சிங்க புரம் )
மணி முத்தா  நதி சங்கமம் ( தென் கரை )  - தேவி தீர்த்தம்
கிழக்கு கரை                                                    - வராஹ தீர்த்தம் ( குடமுருட்டி )
அதன்  கிழக்கு                                                  -  க்ருமிஹர தீர்த்தம்
                                                                                    ( ஹனுமான் சன்னதி )
 வட கரை                                                           - காச்யப தீர்த்தம் ( அம்பாசமுத்திரம் )
அதன் கிழக்கு ( தென் கரை )                      - பிருக தீர்த்தம்
அதன் கிழக்கு ( தென் கரை )                       - கண்வ தீர்த்தம்
                                                                                    ( ம்ருக தரேஸ்வரர் சன்னிதி )
            கல்லிடைக் குறிச்சி
கல்லிடைக் குறிச்சி முதல் சேரன் மகாதேவி வரை
                                          உத்தர வாகினி
  வட பாகம்                          - கோஷ்டீச்வர  தீர்த்தம் ( ஊர்க்காடு )
வட பாகம்                            - சக்ர தீர்த்தம் ( வெள்ளங் கொள்ளித்துறை  )
அதன் வட பாகம்               - மாண்டவ்ய தீர்த்தம்
அதன் வட பாகம் ( கிழக்கு கரை ) - கஜேந்திர மோக்ஷ தீர்த்தம்
                                                                          ( அத்தாழ  நல்லூர் )
அதன் சமீபத்தில்                                   - புஷ்ப வனேச தீர்த்தம் ( மருதுண்ணிக்காடு)
கடனா சங்கமத்தில் ( மேற்கு கரை ) - தண்ட பிரம்ம சாரி தீர்த்தம்
கிழக்கு கரை                                                 - கரும தீர்த்தம்
அதன் வடக்கு                                       - கடனா சங்கம தீர்த்தம்
                   பூர்வ வாகினி
வட கரையில்                                 - மானவ தீர்த்தம் ( பாப்பாக்குடி அருகில் )
தெற்காக                                           - கௌதம தீர்த்தம்
அதன் தென் பாகம்                      - பைசாச மோசன  தீர்த்தம்
அதன் கீழ் புறம் வட கரையில்   - பைரவ தீர்த்தம் ( அரிய நாயகி புரம் )
அதன் கீழ் புறம்                                     - யக்ஷ தீர்த்தம்
அதன் கீழ் புறம்                                    - கோ தீர்த்தம்
அதற்கப்பால்                                           - தர்ம தர்சன தீர்த்தம்
அதன் தென் கரையில்
( கோ தீர்த்தத்திற்கு தெற்காக )          - துர்கா தீர்த்தம் ( காரு குறிச்சி )
அதன் கிழக்காக                                     - விஷ்ணு தீர்த்தம் ( கூனியூர் )
அதன் கிழக்காக                                        - ஸோம  தீர்த்தம்

 சேரன் மகாதேவியில் தென் கரை
  கீழ்ப்பாகம்                                                  - வ்யாஸ தீர்த்தம் ( பக்தப் பிரியன் சந்நிதி )
அதன் கிழக்கு சமீபம்                             - மார்க்கண்டேய தீர்த்தம் 

தாம்ரபரணி -5

தாம்ரபரணி -5
பாண  தீர்த்த தடாகத்திலிருந்து வெளிப்படும் தாம்ரபர்ணி பூர்வ வாகினியாகவும் உத்தர வாகினியாகவும் தக்ஷிணவாஹினியாகவும்
 வெகு தூரம் பாய்ந்து இறுதியில் ஜெயந்தி புரம்  என்னும் திருச்செந்தூருக்கு வட திசையில் மூன்று பாகமாக சமுத்திரத்தில் கலக்கும் வரை சுமார் அறுபதுக்கும் அதிகமான தீர்த்தக் கட்டங்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறாள்.
அவை:
குப்த  ஸ்ருங்க குஹையிலிருந்து பாண  தீர்த்தம் வரை தீர்த்தக் கட்டங்கள்
                                            பூர்வ வாகினி
குகையின் கிழக்கு தென் கரை - ஊர்ஜஸ் தீர்த்தம்
குகையின் கிழக்கு வடகரை    - இஷா தீர்த்தம்
      அதன் கிழக்கு                            - வ்ருஷாங்க தீர்த்தம்
அதன் கிழக்கு தென் கரை        -   அகஸ்திய தீர்த்தம்
    அதன் கிழக்கு                            -  சக்ர தீர்த்தம்
     அதன் கிழக்கு                            - பாவன  தீர்த்தம்
                   உத்தர வாகினி
மேற்கு கரை                                    - வாமன தீர்த்தம்
அதன்  வட  பாகம்                           - ஹேரம்ப தீர்த்தம்
அதன் முன் பாகம்                        -  நார சிங்க தீர்த்தம்
         கீழக்கரை                                 - போகி ராஜ தீர்த்தம்

பின் பாண  தீர்த்தம்
பாண  தீர்த்தம் முதல் கல்யாண தீர்த்தம் வரை

மேலக் கரையில்                         - பாஞ்ச ஜன்ய தீர்த்தம்
அதன் சமீபம் வட  திசை           - சுக்கிர சிலா தீர்த்தம்
அதன் வட திசை                          - வராஹ தீர்த்தம்
அதன் வட திசை                          -  முனி தீர்த்தம்
கீழக் கரையில்                             -  பிசங்கிலா தீர்த்தம்
அதன் வடக்கு                              -   கன்னியா தீர்த்தம் ( குங்குமப் பாறை )

அதன் வடக்கு                               -  வருண தீர்த்தம்
மேலக் கரையில்                          - ரமா தீர்த்தம் ( கலை மான் முகப் பாறை )

அதன் வட திசை                        -   கபிலா தீர்த்தம்
பிறகு  கல்யாண தீர்த்தம் 

தாம்ரபரணி - 4

தாம்ரபரணி - 4
தாம்ரபரணியில் தீர்த்த யாத்திரை
தாம்ரபர்ணி நதியானவள் பொதிகை மலையிலுள்ள குப்த ஸ்ருங்கம் எனப்படும் கொடுமுடியிலிருக்கும் குஹையிலிருந்து உற்பத்தியாகி
முதலில் பூர்வ வாகினியாக ( கிழக்கு  திசையில் ) பாய்ந்து கலம்பகர்த்தம் என்று அழைக்கப் படும் பெரிய தடாகத்தில் அருவியாக விழுகிறாள்.
இந்த  கலம்பகர்த்தம் தான் புகழ் பெற்ற பாண  தீர்த்தம் ஆகும்.
இதன் பெயர் காரணத்திற்கு ஒரு புராண வரலாறு உண்டு.
முற்காலத்தில் த்ரிபுரர்கள் என்னும் கொடிய அசுரர்களால் உலகம் துன்புற்ற பொழுது பரமேஸ்வரன் மிகவும் கோபம் கொண்டு பூமியை ரதமாகவும் பிரம்மாவை சாரதியாகவும்  மேரு மலையை வில்லாகவும் விஷ்ணுவைப் பாணமாகவும் தரித்து அவர்களை வதம்  செய்தார். திரிபுர சம்ஹாரம் ஆன  பின்னும் பாணத்தின் கோபாக்னி குறையாமல் தகித்துக் கொண்டு இருந்ததால் ருத்ர மூர்த்தியானவர் அதை உஷ்ண சமனத்திற்காக கலம்பகர்த்த தடாகக் குழியில் வைத்தார்.
அந்தக் குழியில் மிகுந்த வெப்பத்துடன் ஜொலித்துக் கொண்டிருந்த பாணத்தின் மீது பெரும் வெள்ளமாக தாம்ரபர்ணி தேவியானவள் பாய்ந்து அதன் தாபத்தை தீர்த்தாள். ஸ்ரீ நாராயணன் பாண ரூபம் பெற்று தாம்ரபர்ணியால் ஆராதிக்கப் பட்டதால் பாண தீர்த்தம் என்று புகழ் பெற்றது.
இந்த பாண  தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணுவோர் ஸ்ரீ நாராயணனுடைய அருளைப் பெறுகின்றனர் என்றும் பிரயாகை முதலான பற்பல புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் தங்களின் சுத்திக்காக ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் இங்கு வருகின்றன, என்றும் ஹயக்ரீவ முனிவரின் வாக்காக தாம்ரபர்ணி மாஹாத்மியம் கூறுகிறது.
 

தாம்ரபரணி-3

தாம்ரபரணி-3
பின்னர் உரிய காலம் வந்தவுடன் நதி ரூபம் அடைந்து அகஸ்திய முனிவருடன் புறப்பட்டு கிரமமாகப்  பல புண்ணிய தீர்த்தங்களை உருவாக்கி சமுத்ர ராஜனோடு சேர்ந்தாள்.
பகீரத மகாராஜாவின் விஷயத்தில் கங்கா தேவியானவள் தேவ லோகத்தை விட்டு பூலோகம் வந்தது போல லோக மாதாவான ஸ்ரீ தாம்ரபர்ணி தேவியானவள் பாரத பூமியின் தென் திசையில் எழுந்தருளி  ஸமஸ்தமான ஜனங்களின் பாபத்தையும் தாகத்தையும் போக்குகிறாள்.
இந்த நதி தேவியின் சரிதத்தை கேட்டவர்களும் படித்தவர்களும் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைகின்றனர், என்று சூத பௌராணிகர் கூறினார்.
 

தாம்ரபரணி - 2

தாம்ரபரணி - 2
 உடனே சிவபெருமான் உலகச் சமன் செய்யும் பொருட்டு அகஸ்திய முனிவரையும் லோபாமுதிரையையும் தென் திசை செல்லுமாறு பணித்து கல்யாண கோலத்தை அங்கே காணலாம் என்றும் உறுதி அளித்தார்.
முன்பு பராசக்தியால் அளிக்கப் பட்டதும், திருமண வைபவத்தில் பார்வதியால் தோள் மாலையாக அணிவிக்கப் பட்டதுமான தாமிரை மாலையை சிவன் அகஸ்தியரிடம் அளித்தார்.
அந்த மாலையை அகஸ்தியர் பெற்றுக் கொண்டதும், அது ஒரு பெண்ணாக மாறியது. அங்கு கூடியிருந்த தேவர்கள் பூமாரி பெய்து, தாமிரை மாலையிலிருந்து தோன்றியதால் தாமிரைபர்ணி என்றும் நல்ல அருண சிவந்த வர்ணமுள்ளதால் தாம்ரபர்ணி என்றும் பலவாறு புகழ்ந்து போற்றினர்.
மேலும் அந்த தாம்ரபர்ணி  தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும் உரிய காலத்தில் நதி உருவம் பெற்று சிறந்த மேன்மையை உண்டாக்குவாள்  என்றும் ஈஸ்வரன் அருளிச் செய்து அவளையும் தென் திசைக்கு அழைத்து செல்லுமாறு அகஸ்தியருக்கு உத்தரவிட்டார்.
அகஸ்தியரும் சிவனை வலம்  வந்து கைலாச பர்வதத்திலிருந்து  புறப்பட்டு மலைய பர்வதம் என்னும் பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.
அங்கு மலைய பர்வத ராஜன் தனது மனைவி நந்த தேவியுடன் சிறப்பாக வரவேற்று பூஜைகள் செய்தான். முனிவரின் உத்தரவுப்படி தாம்ரபர்ணி தேவியை தன் புத்திரியாக ஸ்வீகாரம் செய்து கொண்டு வளர்த்து வந்தான்.

 

Tuesday, July 3, 2012

தாம்ரபரணி -1

தாம்ரபரணி -1
தக்ஷ பிரஜாபதியின் புதல்வியாக இருந்த தாக்ஷாயணி தக்ஷன் செய்த சிவ அபராதத்தால் தக்ஷ யாகத்தில் சரீரத் த்யாகம் செய்தாள். மறுபடியும் ஹிமவானின் மகளாக பார்வதியாக அவதாரம் செய்து பரமேஸ்வரனை மணம் செய்யும் பொருட்டு ஸ்ரீ புர  தேவியான பரா சக்தியை  இடைவிடாது ஆராதனை செய்து வரும்போது  பராசக்தி அம்பிகை முன் தோன்றி ஒரு தாமிரை புஷ்ப மாலையை கொடுத்து அந்த மாலையால் உலக நன்மை ஏற்படும் என்று வாழ்த்தி அருளினாள். பின்னர் பார்வதி கல்யாண வைபவம் தொடங்கியது.
அதைக் காண அகஸ்திய முனிவரும் தன்  பத்தினியான லோபாமுத்திரையுடன் வந்திருந்தார். உலகம் முழுவதும் அங்கே  கூடி இருந்ததால் தென் திசை உயர்ந்தது.

தாம்ரபரணி

எல்லாம் வல்ல சத்குரு மூர்த்தியின் திருவருளால் இன்று தென் பொதிகை மலையின் ஆபரணமாம் தாம்ரபரணி நதியைப் பற்றி சில விஷயங்கள் எழுத நினைக்கிறேன். 
பல பெரியவர்கள் நடந்த முறையினைப் பின்பற்றி நாமும் நடக்க இறைவனின் துணையை நாடுவோம்.

சிறந்த தவ சீலரும் பௌராணிகர்களில்  சிறந்தவருமான சூத மாமுனிவர்,
ஒரு சமயம் பாரத பூமி முழுவதும் சஞ்சாரம் செய்து அநேக ஆலயங்களையும் புண்ணிய தீர்த்தங்களையும் தரிசித்து பின்னர் நைமிசாரண்யம் என்னும் சௌனகாதி முனிவர்கள் கூடி இருந்த  இடத்தை அடைந்தார்.  அங்கு அந்த தவ சீலர்கள் கேட்டுக் கொண்ட படி தனது யாத்திரை விவரங்களை தெரிவிக்கும் பொழுது அதிசய நதியான தாம்ர பரணியை ப்பற்றி கூறினார்..