Thursday, October 11, 2012

ஸ்ராத்தங்கள்

ஒரே நாளில் பல ஸ்ராத்தங்கள் சேர்ந்து வந்தால் செய்ய வேண்டிய ஸ்ராத்தங்கள், விட வேண்டிய ஸ்ராத்தங்கள்.

அமாவாசை அன்று மாதப்பிறப்பும் வந்தால் அன்று மாதப்பிறப்புக்காக மட்டும் தர்ப்பணம் செய்தால் போதும் .

அதே போல அமாவாசை அன்றே மன்வாதி, யுகாதி,வ்யதீபாதம் ,வைத்ருதி , க்ரஹணம் போன்றவைகள் வந்தாலும் அமாவாசை தவிர மற்றவைகளை செய்ய வேண்டும்.

சில நேரங்களில் அமாவாசை அன்று மாலை க்ரஹணம் நிகழ்ந்தால் காலையில் அமாவாசை தர்ப்பணமும் மாலை க்ரஹண தர்ப்பணமும் செய்ய வேண்டும்.

ஒரே நாளில் கீழ்க்கண்ட  ஸ்ராத்தங்கள் சேர்ந்து வந்தால் தனித்தனியாக எல்லாவற்றையும் செய்ய வேண்டியது,
அவைகள் - மாதப்பிறப்பு, யுகாதி , மன்வாதி , க்ரஹணம், அர்த்தோதயம் ,மஹோதயம், வைத்ருதி , வ்யதீபாதம்.



ஒரே நாளில் செய்யும் ஸ்ராத்தங்களின் முன் பின் க்ரமம்

அமாவாசையும் சோதகும்பமும் சேர்ந்து வந்தால் முதலில் சோதகும்பமும் பிறகு அமாவாசையும் செய்ய வேண்டும்.

அதே போல மாஸிகமும் அமாவாசையும் சேர்ந்து வந்தால் முதலில் மாஸிகமும் பிறகு அமாவாசையும் செய்ய வேண்டும்.

அதே போல ப்ரத்யாப்தீகமும் அமாவாசையும் சேர்ந்து வந்தால் முதலில் ப்ரத்யாப்தீகமும் பிறகு அமாவாசையும் செய்ய வேண்டும்.

ப்ரத்யாப்தீகமும் மாசப்பிறப்பு , யுகாதி போன்றவைகள் சேர்ந்து வந்தால்
மாசப்பிறப்பு யுகாதி போன்றவற்றை முதலில் செய்து விட்டு பிறகு ப்ரத்யாப்தீகம் செய்ய வேண்டும்.

ப்ரத்யாப்தீகமும் மாஸிகமும் சேர்ந்து வந்தால் முதலில் மாஸிகமும் பிறகு
ப்ரத்யாப்தீகமும் செய்ய வேண்டும்.

ஆப்தீகமும்  மாஸிகமும் சேர்ந்து வந்தால் முதலில் ஆப்தீகமும் பிறகு மாஸிகமும் செய்ய வேண்டும்.

Wednesday, October 10, 2012

ஷண்ணவதி ஸ்ராத்தங்கள்

ஷண்ணவதி ஸ்ராத்தங்கள்
எல்லாம் வல்ல ஸத்குரு மூர்த்தியின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
ஒரு வருடத்தில் 96 தடவை ஸ்ராத்தங்கள் ஹிரண்ய ரூபமாக செய்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இது விசேஷமாக செய்ய முடிந்தவர்கள் செய்யலாம். எனவே அதைப் பற்றிக் குறிப்பு மட்டும் எழுதப் படுகிறது.
தமிழ் மாதங்களை வைத்து இந்தக் குறிப்பு எழுதுகிறோம்.
பன்னிரண்டு மாதங்களின் மாதப்பிறப்பு - பன்னிரண்டு ,
அமாவாசை - பன்னிரண்டு, அஷ்டகை -பன்னிரண்டு,
வ்யதீபாதம் - பதிமூன்று , வைத்ருதி -  பதிமூன்று ,
மன்வாதி - பதினான்கு, யுகாதி - நான்கு, மஹாளயம் - பதினாறு.

அஷ்டகைகள்  என்பது - மார்கழி மாதத்திலிருந்து பங்குனி மாதம் வரை உள்ள மாதங்களில் வரும் கிருஷ்ண பக்ஷ ஸப்தமி ( திஸ்ரோஷ்டகை ),
கிருஷ்ண பக்ஷ அஷ்டமி ( அஷ்டகா ),  கிருஷ்ண பக்ஷநவமி ( அன்வஷ்டகா ) இவையே.




Tuesday, October 2, 2012

நென்மேலி

எல்லோரும் பெற்றோர்கள் இருக்கும் வரை அவர்களை சரியான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும், என்று மட்டும் நினைக்கிறார்கள்.
இருக்கும் வரை எவ்வாறு சரியாக கவனித்துக் கொண்டோமோ, அவர்களின் காலம் கடந்த பின்  செய்ய வேண்டியவைகளையும் தெரிந்து கொண்டு நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.
முக்கியமாக ராமேஸ்வரம், காசி, கயா  மற்றும் புனித தலங்களுக்கு செல்லும்போது மறைந்த முன்னோர்களுக்காக சில சடங்குகள் செய்ய வேண்டும். அவற்றை செய்ய எல்லோருக்கும் வசதிகள் அமையாது.
செங்கல்பட்டு அருகில் நென்மேலி  என்ற திருத்தலம் அமைந்துள்ளது.
இது எளியவர்களின் கயா என்று கூறப்படுகிறது.
இதைப் பற்றி சிறு குறிப்பு.
செங்கல்பட்டு அருகே நென்மேலி  என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள  
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி பல நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப் படுகிறது.
மேலும் இந்த சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தி " ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர் " என்னும் திருநாமமும் இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம் அர்கிய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய  கயா என்றும் வழங்கப்படுகிறது.
இந்த சன்னதியில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணி புரிந்த
ஸ்ரீ யாக்ஞ வல்கியரைக்  குருவாகக் கொண்ட சுக்ல யஜுர்  வேதத்தை  சேர்ந்த யக்ஞ நாராயண ஷர்மா சரஸ வாணி தம்பதிகள் இந்தப் பெருமானின் மீது ஆறாத பக்தி கொண்டிருந்தனர்.
மேலும் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும்  தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரச தண்டனையை ஏற்க  விரும்பாமல்  திருவிடந்தை என்னும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
அவர்களுக்கு தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மனம் வருத்தத்துடன் மரணமடைந்தார்கள்.
அவர்களுடைய எண்ணத்தை எம்பெருமானே செய்ததாக பெருமாள் சாட்சியம் சொன்னார்.
அந்த திவானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்ததிகள்  இல்லாருக்கும் ஸ்ராத்தம் செய்ய இயலாதவர்களுக்கும் தானே முன்னின்று ஸ்ராத்தம் செய்து வைப்பதாக எத்தனித்து குதப காலம் என்னும் பித்ரு வேளையில் ( 12 மணி முதல் 1 மணி வரை ) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார்.

எனவே இங்கு ஸ்ராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே ஸ்ராத்த சம்ரக்ஷணம் ஆகும்.
இந்த ஸ்வாமிக்கு நிவேதிக்கப்படும் வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்த்த துவையலும் நிவேதனமாகும்.
ஸ்வாமி  இதனை மட்டும் ஏற்று பித்ருக்களை திருப்தி செய்கிறார்.
தினமும் நடை பெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியிலோ , அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ அல்லது என்று முடியுமோ அன்று கலந்து கொள்வது கயை  ஸ்ராத்தம் செய்த பலனைக்கொடுக்கும் .

அர்ச்சகரின் முகவரி;
ஸ்ரீ சம்பத் பட்டாச்சாரியார் ,
பிராமணர் வீதி,
நென்மேலி  போஸ்ட், வல்லம் வழி ,
செங்கல்பட்டு -603002,
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன் : 044 - 27420053. Mobile:9626283053.
இந்த தலம்  செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து  ஐந்தாவது கிலோ மீட்டரில் உள்ளது.

பித்ரு பூஜை பகல் 12 மணிக்கு மேல் மட்டுமே நடை பெறும், இதில் கலந்து
கொள்பவர்கள் 10 மணிக்கு சன்னதியில் இருக்க வேண்டும்.
அர்ச்சகரிடம் முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நம் இல்லங்களில் முன்னோர்களுக்காக ஸ்ராத்தம் செய்தாலும் அந்த திதியில் இந்த சன்னதியில் பணம் அனுப்பி பூஜை செய்ய வேண்டிக் கொள்ளலாம்.
குறைந்த கட்டணம் தான், எனவே எல்லோரும் பயன் பெற வேண்டும்.

நன்றி. வாழ்க பாரதம். 

Tuesday, July 10, 2012

சண்டி ஹோமம்

சத்குருவின் திருவருளால் சண்டிகா  ஹோமமும் இதில் உள்ளது.
நன்றி.


http://www.scribd.com/doc/99683508/chandika-havanam

Wednesday, July 4, 2012

தாம்ரபரணி - 8

தாம்ரபரணி - 8
ஸ்ரீ வைகுண்டம் முதல் சங்கமம் வரை
தெற்காக                                                   - சாரதா தீர்த்தம்
                                    தக்ஷிண  வாகினி
தென் கிழக்கு                                             - ஸ்மராள தீர்த்தம்
தென் கிழக்கு                                              - மகா குஸும தீர்த்தம்
தென் கிழக்கு                                              - குஸும வ்ருஷ்டி தீர்த்தம் 
தென் கிழக்கு                                               - சத புத் புத தீர்த்தம்
                                   பூர்வ வாகினி
வட கரை                                        -  காந்தீஸ்வர தீர்த்தம்
எதிராக  தென் கரை                     - ரமா தீர்த்தம் , போகீ தீர்த்தம்,                        சக்ரதீர்த்தம்     முதலியவை ( ஆழ்வார் திருநகரி )
கிழக்காக                                             - நிதி தீர்த்தம்
அதற்கு அப்பால்                               - கால தீர்த்தம்
 அதற்கு அப்பால்                                - நிசா தீர்த்தம்
அதற்கு அப்பால்                                   - சுருதி தீர்த்தம்
அதற்கு அப்பால்                                      - மகர தீர்த்தம்
அதற்கு அப்பால்                                         - கலா தீர்த்தம்
அதற்கு அப்பால்                                         - மங்கள தீர்த்தம்
வட கரை                                                       - ஹர்ஷ தீர்த்தம்
வட கரை                                                      - லக்ஷ்மீ நாராயண தீர்த்தம்
வட கரை                                                  - பித்ரு தீர்த்தம் ( அப்பன் கோவில் )
வட கரை                                                - அச்விநீ தீர்த்தம் ( இரட்டைத் திருப்பதி )
வட கரை                                               - மோகாபக தீர்த்தம் ,
                                                                       முக்தி முத்திரா தீர்த்தம்
                                                                    மதாவள தீர்த்தம் முதலியவை
                                                                           ( பெருங்குளம் )
வட கரை                                                - ஞான தீர்த்தம் ( ஆறுமுக மங்கலம் )
வட கரை                                                 - அக்னி தீர்த்தம் ( அக்கா சாலை )
தென் கரை                                            - வஸ்து தீர்த்தம்
தென் கரை                                           - கங்கா தீர்த்தம் ( சொக்கப் பழங் கரை )
தென் கரை                                          - ஸோம தீர்த்தம் ( ஆற்றூர் )
தென் கரை                                            - சண்டிகா தீர்த்தம் ( சேந்த மங்கலம் )
தென் கரை கிழக்காக                      - வல்லீ தீர்த்தம்
                                                                       ஹர்ஷ  தீர்த்தம்
                                                                     கௌரீ தீர்த்தம்
                                                                       சம்பு நாராயண தீர்த்தம்
                                                                            சங்க ராஜ தீர்த்தம்
வட கரை                                               - அகஸ்திய தீர்த்தம்
                                                                               ஸங்கமேஸ்வர  தீர்த்தம்
அதற்கு கிழக்கு மூவாற்றுக் கடலில்
காயத்ரீ ,   ஸாவித்திரீ, ஸரஸ்வதீ தீர்த்தங்கள் ........

ஸத்குரு  பாதம் துணை .... 

தாம்ரபரணி -7

தாம்ரபரணி -7
சேரன் மகாதேவி முதல் ஸ்ரீ வைகுண்டம் வரை
மார்க்கண்டேய தீர்த்தம் சமீபம் - ரோமச தீர்த்தம் ( கோடக நல்லூர் , பத்தமடை )
அதன் கிழக்கு                                     - தௌர் வாஸ  தீர்த்தம்
                                                                             ( கரி சூழ்ந்த மங்கலம் துறை )
கரி சூழ்ந்த மங்கல துறைக்கு சமீபமாக செவலுக்கு  தென் மேற்கு திசையில் ஸ்ரீ விஷ்ணு பகவான் கலியுக முடிவில் கல்கி அவதாரம் செய்யப் போகிறார்.


அதன் கிழக்கு கரை                   - வைனதேய தீர்த்தம்
                                                                    ( கசாளி நதியின் சங்கமத்தில் )
அதற்கு எதிராக வட கரை            - சாயா தீர்த்தம்
அதன் கீழ்புறம்                                      - காந்தர்வ தீர்த்தம்
அதன் கீழ்புறம்                                   - பானு தீர்த்தம்
அதன் சமீபம்                                          -  பிரபாவ தீர்த்தம் 
அதன் சமீபம்                                         - கெளரி,சரஸ்வதி ,விருஷப தீர்த்தங்கள்
                                                                              ( செவல் )
                                                                        இவ்வளவும் சியாமா நதியின் கூடல் வரை

சியாமா நதியின் கூடல் ( பச்சையாறு )   - மந்திர தீர்த்தம்
அதற்கு வட திசை                                            - க்ஷிப்த புஷ்ப தீர்த்தம்
                                                                                         (சிந்து பூந்துறை)
அருகில்                                                                        - ரிஷி தீர்த்தம் (தருவை )
கீழக் கரையில்                                                   - ஸமிர்த்தி தீர்த்தம்
அதற்கு  வட திசை                                              - தயா தீர்த்தம்
அதற்கு     வட திசை                                       - புஜங்க மோசன தீர்த்தம்
அதற்கு வட திசை                                         - சூசி தீர்த்தம்
கீழக் கரையில்                                              - கேது தீர்த்தம் ,
                                                                                    உஷா தீர்த்தம் ,
                                                                                      ஹலானை தீர்த்தம்

              பூர்வ வாகினி
இராம தீர்த்தம் , ஜடாயு தீர்த்தம் ,ருத்ர பாத தீர்த்தம் ( திருவண்ணாத புரம்  அருவங்குளம் ) பாபவிமோசன தீர்த்தம் ,
                                              அச்ருத தீர்த்தம்
வட கரை                                                          - நதீ ஸ்தம்பன தீர்த்தம்
வட கரை                                                   - பூஷா பதன தீர்த்தம் ( செப்பரை )
வட கரை                                                     - துரிதாபக தீர்த்தம்
வட கரை                                                    - மங்கள தீர்த்தம் ( பாலாமடை )
வட கரை                                                   - மகர லோகித தீர்த்தம்
                    தக்ஷிண  வாகினி
        சித்திரா  சங்கம தீர்த்தம்
விஷ்ணு வனம் ( சீவலப் பேரி )               - கோ தீர்த்தம்
                                                                                    விஷ்ணு தீர்த்தம்
                                                                                  குச ஸ்தம்ப தீர்த்தம்
                                                                               ம்ருத்யுஞ் ஜய தீர்த்தம்
                                                                                  தைத்த ரீய தீர்த்தம்
                                                                                   ராஜ சூய தீர்த்தம்
                                                                        மகா  விரத தீர்த்தம்
ஸா த்திய தீர்த்தம் ,விச்வேதேவ  தீர்த்தம் ,
தசாவதார தீர்த்தம் ( அகரம் ) முதலியவை
தென் கரை                                                -  ஸப்த ரிஷி தீர்த்தம்
தென் கரை                                                  - மாஞ் ஜிஷ்ட தீர்த்தம்
தென் கரை                                                    - போகீ தீர்த்தம்
                          பூர்வ வாகினி
வட கரை                                              - கலச தீர்த்தம் ( ஸ்ரீ வைகுண்டம் )
              

தாம்ரபரணி - 6

தாம்ரபரணி - 6

கல்யாண தீர்த்தம் முதல் பாபவினாசம்  வரை
சிறிது வட கிழக்கில்                              -  நாரத தீர்த்தம்
அதன் வடக்கில்                                       - வருண தீர்த்தம் ( ஐந்தலை அருவி )
அதன் வட திசை                                     - ப்ராசேதஸ தீர்த்தம்
அதன் தெற்கு                                         - தும்புரு தீர்த்தம்
அதன் தெற்கு                                           - பர்வத தீர்த்தம்
பாபவினாசம்                                             - இந்திர கீல  தீர்த்தம்
அதன் வட திசை                                     - த்ரி நதீ சங்கம தீர்த்தம் 
பாபவினாசம்  முதல் கல்லிடைக் குறிச்சி வரை
                   பூர்வ வாகினி
பாபவிநாசத்திற்கு கிழக்கில் ( வட கரை ) - தீப தீர்த்தம்
அதன் கிழக்கு                                                        - சாலா  தீர்த்தம்
                                                                                     ( விக்கிரம சிங்க புரம் )
மணி முத்தா  நதி சங்கமம் ( தென் கரை )  - தேவி தீர்த்தம்
கிழக்கு கரை                                                    - வராஹ தீர்த்தம் ( குடமுருட்டி )
அதன்  கிழக்கு                                                  -  க்ருமிஹர தீர்த்தம்
                                                                                    ( ஹனுமான் சன்னதி )
 வட கரை                                                           - காச்யப தீர்த்தம் ( அம்பாசமுத்திரம் )
அதன் கிழக்கு ( தென் கரை )                      - பிருக தீர்த்தம்
அதன் கிழக்கு ( தென் கரை )                       - கண்வ தீர்த்தம்
                                                                                    ( ம்ருக தரேஸ்வரர் சன்னிதி )
            கல்லிடைக் குறிச்சி
கல்லிடைக் குறிச்சி முதல் சேரன் மகாதேவி வரை
                                          உத்தர வாகினி
  வட பாகம்                          - கோஷ்டீச்வர  தீர்த்தம் ( ஊர்க்காடு )
வட பாகம்                            - சக்ர தீர்த்தம் ( வெள்ளங் கொள்ளித்துறை  )
அதன் வட பாகம்               - மாண்டவ்ய தீர்த்தம்
அதன் வட பாகம் ( கிழக்கு கரை ) - கஜேந்திர மோக்ஷ தீர்த்தம்
                                                                          ( அத்தாழ  நல்லூர் )
அதன் சமீபத்தில்                                   - புஷ்ப வனேச தீர்த்தம் ( மருதுண்ணிக்காடு)
கடனா சங்கமத்தில் ( மேற்கு கரை ) - தண்ட பிரம்ம சாரி தீர்த்தம்
கிழக்கு கரை                                                 - கரும தீர்த்தம்
அதன் வடக்கு                                       - கடனா சங்கம தீர்த்தம்
                   பூர்வ வாகினி
வட கரையில்                                 - மானவ தீர்த்தம் ( பாப்பாக்குடி அருகில் )
தெற்காக                                           - கௌதம தீர்த்தம்
அதன் தென் பாகம்                      - பைசாச மோசன  தீர்த்தம்
அதன் கீழ் புறம் வட கரையில்   - பைரவ தீர்த்தம் ( அரிய நாயகி புரம் )
அதன் கீழ் புறம்                                     - யக்ஷ தீர்த்தம்
அதன் கீழ் புறம்                                    - கோ தீர்த்தம்
அதற்கப்பால்                                           - தர்ம தர்சன தீர்த்தம்
அதன் தென் கரையில்
( கோ தீர்த்தத்திற்கு தெற்காக )          - துர்கா தீர்த்தம் ( காரு குறிச்சி )
அதன் கிழக்காக                                     - விஷ்ணு தீர்த்தம் ( கூனியூர் )
அதன் கிழக்காக                                        - ஸோம  தீர்த்தம்

 சேரன் மகாதேவியில் தென் கரை
  கீழ்ப்பாகம்                                                  - வ்யாஸ தீர்த்தம் ( பக்தப் பிரியன் சந்நிதி )
அதன் கிழக்கு சமீபம்                             - மார்க்கண்டேய தீர்த்தம்