தற்போதைய தமிழக அரசு சிறப்பாக செயல் படவேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். மின்பற்றாக்குறை தீரவில்லை. சென்னை தவிர மற்ற இடங்களில் பல மணிகள் மின் வெட்டு ஏற்படுகிறது. இலவச மின்சாரம் தேவையானவர்களுக்கு மட்டும் வழங்கினால் பொது மக்களுக்கு இன்னும் அதிக அளவு மின்சாரம் கொடுக்க முடியும்.
தேவையில்லாமல் கூடங்குளம் பிரச்னை நீடித்துக் கொண்டே போனால் மின்பற்றாக்குறை சமாளிக்க முடியாமல் போகும்.
சென்னையிலும் அதை சுற்றி அமைந்துள்ள பல வசதியான கல்லூரிகளையும் பெரிய அளவு வணிக நிறுவனங்களையும் சூரிய ஒளி மின்சாரம் பயன் படுத்த வற்புறுத்த வேண்டும்.
தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் பயன் படுத்த வேண்டும். தெரு விளக்குகளுக்கும் சூரிய ஒளி பயன் படுத்தினால் பொது மக்களுக்கு மின்சாரம் அதிக அளவில் கொடுக்க முடியும்.
கடலில் வீணாக சென்று அடையும் மழை நீரை சரியான முறையில் சேமிக்க திட்டங்கள் வகுக்கப் பட வேண்டும்.
இலவச மடிக்கணினி களுக்குப் பதிலாக இந்தியாவில் தயாராகும் குறைந்த விலை டேபிலேட் என்று சொல்லப் படும் கணினிகளை வழங்கலாம்.
அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும்.
எல்லோருக்கும் இருப்பிடங்களின் அருகிலேயே அரசின் மருத்துவமனைகள் இருக்கும்படி செய்ய வேண்டும்.
Showing posts with label அரசு. Show all posts
Showing posts with label அரசு. Show all posts
Wednesday, February 15, 2012
Wednesday, August 31, 2011
அரசு
எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் சமீபத்தில் குற்றாலம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த கருணாநிதியின் ஆட்சிக் காலத்தின் நானும் என் நண்பரும் காஞ்சிபுரம் சென்று இருந்தோம். அப்போது கழிவறையை உபயோகிக்க 4 ரூபாய்கள் கட்டணமாக கேட்டார்கள். அது மட்டுமல்ல கழிவறைகள் சரியான பராமரிப்புகள் இல்லாமலேயே இருந்தன. அதைப் போலவே தற்பொழுதும் குற்றாலத்தில் கழிவறையை உபயோகிக்க 5 ரூபாய்கள் கேட்டார்கள். என்னமோ எதற்கு எடுத்தாலும் விலை வாசி ஏறி விட்டது என்பதாக நாம் சொல்லுகிறோம். ஆனால் கழிவறையை சரியாக பராமரிக்காமலேயே அதற்கு கட்டணம் வசூலிப்பது என்ன நியாயம். அரசு சிந்திக்குமா?
Friday, August 26, 2011
அரசு
தற்போதைய தமிழக அரசின் பல நடவடிக்கைகளை வரவேற்கிறோம். ஆனால் மிக முக்கியமாக சென்னை பெருமைப் படும் விதமாக இல்லை. சாலைகள் அனைத்துமே குண்டும் குழியுமாக உள்ளன. இதை சரி செய்ய நடவடிக்கை உடனடித்தேவை. நன்றி.
Subscribe to:
Posts (Atom)
