Showing posts with label நம்மாலும் முடியும். Show all posts
Showing posts with label நம்மாலும் முடியும். Show all posts

Thursday, April 7, 2011

மரம் வளர்ப்பு

மதிப்பிற்குரிய பதிவர் ஓம்கார் அவர்களால் அவர்களின் பதிவில் விளக்கப் பட்டபடி மரங்கள் வளர்ப்பு பற்றி பதிவர்கள் முயற்சி செய்து விழிப்புணர்வு ஏற்பட செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நடந்து வரும் அரசால் சென்னையில் செம்மொழிப் பூங்கா அமைக்கப் பட்டு இருக்கிறது. இதை சமீபத்தில் சென்று காணும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்த பூங்காவில் வைப்பதற்காக சீனாவிலிருந்து போன்சாய் மரங்களை இறக்குமதி செய்து இருக்கிறார்கள். இதற்கு எத்தனை கோடி ரூபாய்கள் செலவழிக்கப் பட்டதோ தெரியவில்லை, இருக்கட்டும்.

மக்கள் தங்கள் இருப்பிடங்களில் மரங்களை வளர்த்து நகரத்தின் வெப்பத்தைக் குறைக்க முடியும். புரிந்து கொண்டு அனைவரும் செயல் படுவோம். தெரிந்த ஈடுபடக் கூடிய அனைவரின் ஒத்துழைப் பெற்று செயல் பட்டால் உலகத்தின் வெப்பத்தையே தமிழகத்தால் குறைக்க முடியும்.
நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவது இயல்பே!
ஆனால் இப்போது நாம் மட்டும் நன்றாக வாழ முடிவது , நம் முந்தின தலை முறையினர் செயல் பட்டு இருப்பதாலேயே!
முயற்சியை செய்வோம்!
வெற்றி பெறுவது அடுத்த தலை முறை ஆனாலும் நன்றே!