Showing posts with label வேண்டுகோள். Show all posts
Showing posts with label வேண்டுகோள். Show all posts

Thursday, April 7, 2011

பயனுள்ள கருத்துக்கள்

தலைப்பு பயனுள்ளதாக இருக்கிறது. இந்த பதிவில் விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால் நாம் இணையத்தில் எத்தனையோ விஷயங்களைப் படித்து தெரிந்து கொள்கிறோம். அதை பலரிடமும் இணையத்தை பயன் படுத்தாத ஆனால் அந்த விஷயத்தை உபயோகப் படுத்திக்கொள்ள முடிந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டால் நன்மை எல்லோருக்கும் கிடைக்கும். இதை சொல்லவே இந்த பதிவு!
நன்றி!

சக்தி சுரபி

தற்போது தான் சொல்வனம் என்ற இணைய இதழில் சக்தி சுரபி என்ற இயற்கை எரிவாயு வீடுகளுக்கு பயன் படுத்தும் படியாக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்திலிருந்து அங்கு அருகாமையில் உள்ள மக்களுக்கு அறிமுகம் செய்து இருக்கிறார்கள். இதை அவர்கள் செய்து பல வருடங்கள் ஆகிறது. இப்போது தான் தெரிந்து கொள்ள முடிந்தது. சாண எரிவாயு அல்ல இது, காய்கறிக் கழிவுகளை இதற்கு பயன் படுத்துகிறார்கள். இதை படிப்பவர்கள் சொல்வனத்தில் சென்று பார்த்து பயன் பெறுமாறும், தெரிந்தவர்கள் பயன் படக் கூடியவர்களிடமும் இதை சொல்ல வேண்டுகிறேன். இனிமேல் வரக் கூடிய காலங்களில் எரிவாயுவிற்கான மானியம் குறைந்து விலைகள் அதிகமாகும் முன்னாலேயே நம்மால் முடிந்த அளவு செயல் பட வேண்டும்! சிறு நகரங்களில் தனி வீடுகளில் வசிக்கும் மக்கள், பெரு நகரங்களில் குழுவாக தனி வீடுகளில் வசிக்கும் மக்களும் இதை நன்றாக பயன் படுத்த முடியும்! அரசுகளை குறை சொல்வதை குறைத்துக் கொண்டு நம்மால் முடிந்த அளவு இயற்கைக்கு இசைந்த அளவு வாழப் பழக வேண்டும்!