Monday, January 21, 2013

ஸத்குரு வாழ்த்து

ஓம் நமோ பகவதே ஞானானந்தாய!
ஸத்குரு வாழ்த்து
( நேரிசை ஆசிரியப்பா )
நித்த னி ருமல னி ராமயன் ,பூரணன்
சுத்த பரஞ்சுடர் சுயம் பிரகாசன்
ஞாலம் வணங்கும் ஞானானந்தமாய்
உலகெலாம் உணரும் உண்மையறிவாய்,
அறம் பொருள் இன்பம் அழியா வீடென
திறம்படக் காட்டிய செம்மை நெறியினன்,
தன்னை யறிவித்துத் தற்பரமாக்கி
என்னு ளத்திருந்த ஏக நாயகன்.
பந்தமனைத்தும் பாழ்படத் தள்ளியென்
சிந்தையுட் புகுந்த செழுஞ் சுடர் ஜோதி.
எல்லைக் கடங்கா ஏகப் பெருவெளி
தில்லையில் கண்டு தினமும் களித்தவன்
இறவா மனத்தை இறக்க உணர்த்திப் பிறவா
நெறி தரும் பேரறிவாளன்.
நற்குண மனைத்தும் நண்ணிய பெருந்தகை
சற் குரு ஞானானந்த சாந்த மெய்ச் செல்வன்.
பூத முதலாய் பொலிந்திடு நாத ஒளியை,
பேத முங் கடந்த பெருந்தகை மூர்த்தி
மூலாதார முதலாயுள்ள மூர்த்தி ரூபத்தை
மேலா றாதாரமும் வெறு வெளி கண்ட வித்தகன்.
மண்டல மூன்றிலும் மண்ணிய உருவிலும்
கண்டவை அனைத்திலும் கடவுளாய் நின்றோன்.
ஸோகம் பாவனை சுத்தமாய் ச் செய்யென
ஆகம நூல் கொண்டு அன்போடுணர்த்தி,
சங்கரன் காட்டிய சனகாதி நால்வருக்கு
இங்கிதமாய் எடுத்துரைத்த சின் முத்திரையை
வாக்கிறந்த பூரணமாய் மறைக் கப்பாலாய்
தேக்கிறந்த எல்லாமாய் அல்லவுமாயிருந்து
திரையிலாக் கடல் போல சலனம் தீர்ந்து
இரையுடல் மறந்து இன்ப நிலை காட்டி,
ஒரு மொழியாலே உண்மை உணர்த்தி
திரு உணர் வாளன்  மருளிலா மனத்தன்,
எண்ணிய எண்ணமெல்லாம் தெரிந்து எனக்கு
தண்ணருள் செய்த ஞானானந்த தற்பரன்.
ஒரு மொழி பகர்ந்த உதவியாலவன்றன்
இருபத முப்போ திறைஞ்சி வாழ்த்துவனே.!


எடப்பாடி கோ. வை. சின்ன ஆறுமுக பக்தர்.

ஞானானந்த சுவாமி அருள் பெற்ற இவரால் எழுதப் பட்டதை இங்கு பதிவு செய்வதில் குரு க்ருபை அருள் செய்தது.

Tuesday, December 18, 2012

செட்டிப் புண்ணியத்தில் ஸ்ரீ வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை

செட்டிப் புண்ணியத்தில் ஸ்ரீ வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை
அருள்மிகு தேவநாதப் பெருமாள் கோவில், செட்டிப் புண்ணியம் - 603204, காஞ்சி புரம் மாவட்டம் .
நந்தன வருடம் தை மாதம் 13 ம் தேதி ஜனவரி 27ம் தேதி ( 27-1-2013) அன்று மாணவ மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று  வெற்றி பெறுவதற்காக, இத்திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ யோகா ஹயக்ரீவருக்கு  ஸ்ரீ வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை வழக்கம் போல சிறப்பாக நடைபெற உள்ளது.
ரூ. 50, கட்டணமாக செலுத்தி கலந்து கொள்ளலாம் .
நிகழ்ச்சி நிரல்
காலை 4.30 மணி க்கு விஸ்வ ரூப தரிசனம்
6 மணி முதல் 7.30 மணி வரை ரட்சை பூஜை
9மணிக்கு  ஸ்ரீ ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
செயல் அலுவலர் ,
அருள்மிகு தேவநாத சுவாமி திருக்கோவில்,
செட்டிப்புண்ணியம் ,
செங்கல்பட்டு வட்டம்
603204.
தொலைபேசி ; 8675127999 / 9942993770.
நன்றி. வாழ்க பாரதம்!

Friday, October 19, 2012

சிவசைலம்

சிவசைலம்
எல்லாம் வல்ல ஸ த் குரு மூர்த்தியின் திருவருளால் சிவசைலம் என்ற திருத்தலத்தைப் பற்றி எழுத நினைக்கிறேன். முழுமை அடைய கணபதியைப் பணிகின்றேன்.


சிவசைலபதியையும் பரம கல்யாணி நாயகியையும் அழகிய
ஸ்நேக புரத்தையும் கடநா  நதியையும் வணங்குகின்றேன்.
அத்ரி மஹ ரிஷியால் பூஜை செய்யப்பட்டவரும் மங்களத்தைச் செய்பவரும் பக்தர்களின் கோரிக்கைகளை நன்றாய் பூர்த்தி செய்கின்றவரும் பதினாறு ஆவடையாளுடன் கூடியவருமாகிய சிவசைல பதியை நமஸ்கரிக்கின்றேன்.
நான்கு கைகளுடன் கூடியவளும் விசாலமான நேத்திரங்களுடன் கூடியவளும் செம்பரத்தை புஷ்பத்திற்கு சமமான சோபையுடையவளும் ஆகிய பரம கல்யாணியை சப்தார்த்தங்கள் நன்கு விளங்குவதன் பொருட்டு நமஸ்கரிக்கின்றேன்.



 

Thursday, October 18, 2012

ஆழ்வார்குறிச்சி

 ஆழ்வார்குறிச்சி
இந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் அம்பாசமுத்திரத்திலிருந்து கடையம் செல்லும் வழியில் உள்ளது.
இந்த ஊரில் இரண்டு நதிகள் ஓடுகின்றன. கடனா நதி, ராம நதி ( வர நதி ) .
காசி திருத்தலத்தில் வருணை, அஸி என்று இரண்டு நதிகள் உள்ளது போல இந்த அமைப்பு தோன்றுகிறது.
இந்த ஊரில் இரண்டு சிவன் கோவில்களும், இரண்டு பெருமாள் கோவில்களும் உள்ளன.

Friday, October 12, 2012

பித்ரு ஸ்துதி: ( தமிழ் அர்த்தம் )

பித்ரு ஸ்துதி: ( தமிழ் அர்த்தம் )

ப்ரம்ஹ தேவர் கூறினார்

ஜன்மத்தை அளிப்பவரும் எல்லா தேவர்களின் வடிவானவரும் ஸுகத்தைக் கொடுப்பவரும் மகிழ்ந்தவரும் நல்ல விருப்புடையவரும் பெரியவருமான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

எல்லா யக்ஞங்களின் வடிவானவருக்கும் ஸ்வர்கமானவருக்கும் ப்ரம்ஹாவானவருக்கும் எல்லா தீர்த்தங்களையும் கண்டவருக்கும் கருணைக் கடலானவருக்கும் நமஸ்காரம்.

 எப்போதும் விரைவில் மகிழ்பவரும் சிவ வடிவானவருமான உமக்கு நமஸ்காரம்.

எப்போதும் பிழைகளைப் பொறுப்பவரும் ஸுக வடிவானவரும் ஸுகத்தை அளிப்பவருமான உமக்கு நமஸ்காரம்.

 கிடைத்தற்கரியதும் அறத்தையும் பொருளையும் பெறுதற் பொருட்டமைந்ததுமான இந்த மனித உடலை எவர் மூலமாக அடைந்தேனோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

 எவருடைய தர்சனம் தீர்த்தம்,ஸ்நானம் ,தவம்,ஹோமம்,ஜபம் முதலியவற்றின் புண்ணிய பலனாக அமையுமோ அத்தகைய மஹாகுருவுக்கும் குருவான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

எவருடைய நமஸ்காரமும் ஸ்தோத்ரமும் கோடி முறை பித்ருக்களின் தர்ப்பணம் செய்ததற்கும் நூறு அச்வ மேதங்களைச் செய்ததற்கும் ஈடாகுமோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

பித்ரு தேவரின் புண்யமான இந்த ஸ்தோத்ரத்தை எந்த மனிதன் முயற்சியோடு தினமும் காலையில் எழுந்தும் பித்ரு ஸ்ராத்தத்திலும் தன் பிறந்த நாளிலும் பித்ருவின் முன்னின்றும் படிக்கிறானோ, அவனுக்கு   ஸர்வஜ்ஞத்வம் முதலியவற்றில் அடையக் கூடாதது என்று ஒன்றுமில்லை.

 ஒரு மகன் பலவிதமான தீய செயல்களைச் செய்த போதிலும் பித்ரு தேவரை ஸ்தோத்ரம் செய்தால் அவன் பிராயச்சித்தம் செய்து ஸுகமடையலாம். பித்ருக்களுக்கு ப்ரீதியை செய்த அவன் எல்லாக் கர்மாவிலும் தகுதியுடையவனாகிறான்.       

 

பித்ரு ஸ்துதி: ( தமிழ் )

பித்ரு ஸ்துதி: ( தமிழ் )
ப்ருஹத் தர்ம புராணத்தில் அமைந்துள்ளது இந்த ஸ்தோத்ரம்

                      ஸ்ரீ பிரம்மா  உவாச

ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே

ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே
 ஸர்வ தீர்த்தாவலோகாய  கருணா ஸாகராய ச

நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம:
ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச

துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:
ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:

தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்
மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:

யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்
அஸ்வ மேத சதை ஸ்துல்யம்  தஸ்மை பித்ரே நமோ நம:

                                   பல ச்ருதி:

இதம் ஸ்தோத்ரம் பிது: புண்யம் ய: படேத் ப்ரயதோ நர:
ப்ரத்யஹம் ப்ராதருத்தாய பித்ரு ஸ்ராத்த தினே s பி  ச
ஸ்வ ஜன்ம திவஸே ஸாக்ஷாத் பிதுரக்ரே ஸ்திதோபி வா
ந  தஸ்ய துர்லபம் கிஞ்சித் ஸர்வஜ்ஞதாதி வாஞ்சிதம்

நானாபகர்ம க்ருத்வாதி ய: ஸ்தௌதி பிதரம் ஸுத:
ஸ த்ருவம் ப்ரவிதாயைவ ப்ராயஸ்சித்தம் ஸுகீ பவேத்
பித்ரு ப்ரீதி கரோ நித்யம் ஸர்வ கர்மாண்யதார்ஹதி


                                       மங்களம் 
    

பித்ரு ஸ்துதி:

பித்ரு ஸ்துதி:
ப்ருஹத் தர்ம புராணத்தில் அமைந்துள்ள இந்த ஸ்தோத்ரம் தென் புலத்தாராகிய பித்ரு தேவர்களைப் பற்றியது.
       
                   ब्रह्मोवाच
ॐ नमः पित्रे जन्मदात्रे सर्व देव मयाय च
सुखदाय प्रसन्नाय सुप्रीताय महात्मने

सर्व यज्ञ स्वरूपाय स्वर्गाय पर मेष्टिने
सर्वतीर्थावलोकाय करुणा सागराय च

नमः सदा s s शु तोषाय शिव रूपाय ते नमः
सदा s पराध क्षमिणे सुखाय सुखदाय च

दुर्लभं मानुषमिदं येन लब्धं मया वपुः
संभावनीयं धर्मार्थे तस्मै पित्रे नमो नमः

तीर्थ स्नान तपो होम जपादि यस्य दर्शनम्
महागुरोश्च गुरवे तस्मै पित्रे नमो नमः

यस्य प्रणामस्तवानात्  कोटिशः पितृ तर्पणम्
अश्वमेधशतैस्तुल्यं तस्मै पित्रे नमो नमः


                       फल श्रुतिः

इदं स्तोत्रं पितुः पुण्यं यः पठेत्प्रयतो नरः
प्रत्यहं प्रातरुत्थाय पितृ श्राद्ध दिनेsपि च
स्व जन्म दिवसे साक्षात्पितुरग्रे स्थितो sपि वा
न  तस्य दुर्लभं किञ्चित् सर्वज्ञतादि वाञ्छितम्

नानापकर्म कृत्वापि यः स्तौति पितरं सुतः
स ध्रुवं प्रविधायैव प्रायश्चित्तं सुखी भवेत्
पितृप्रीतिकरो नित्यं सर्व कर्माण्यथार्हति
                       शुभम्