Thursday, April 1, 2010

பிரார்த்தனை பலித்தது!

பிரார்த்தனை பலித்தது
இறைவனிடம் நான் மிகுந்த பலம் வேண்டுமென்று கேட்டேன்!
அவர் எனக்கு சில கஷ்டங்களை உண்டாக்கி என்னைப் பலமுள்ளவனாக்கினார்!
மிகுந்த அறிவாற்றல் வேண்டுமென்று கேட்டேன்!
பல பிரச்சினைகளை உண்டாக்கி அவற்றினை தீர்க்கும் வாய்ப்பினையும் உருவாக்கித் தந்தார்!
குறையாத வளமைகள் வேண்டுமென்று கேட்டேன்!
தளராமல் உழைப்பதற்கு ஆற்றல் மிகு மூளையைத் தந்தார் இறைவன்!
அஞ்சா நெஞ்சம் வேண்டுமென்று பிரார்த்தித்தேன்!
ஆபத்துகளை உருவாக்கி அவற்றைக் கடக்கும் திறமையைத் தந்தார்!
அன்பு வேண்டுமென்று வேண்டினேன்!
துன்பத்தில் உழலும் மக்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பினைத் தந்தார்!
நான் பல சலுகைகளைக் கேட்டேன்!
அவர் பல வாய்ப்புகளைத் தந்தார்!
நான் விரும்பிக்கேட்டது எதையும் பெறவில்லை!
ஆனால் என் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டன!
என் பிரார்த்தனை பலித்தது!


இது என்னால் எழுதப்படவில்லை! எழுதியவருக்கு நன்றிகள்!