Wednesday, November 24, 2021

எம் ஜென்ம பூமி தாயே! எம் கர்ம பூமி நீயே!

 

வந்தே மாதரம்.

எம் ஜென்ம பூமி தாயே! எம் கர்ம பூமி நீயே!

எம் புண்ய பூமி தாயே! குலதெய்வம் என்றும் நீயே!

 

வாழ்வாம் மலர்தனை, உன்

திருவடிதனில் படைத்தோம்

ஏழேழு பிறவி தோறும்,

உனையே வணங்கி வாழ்வோம்

உனதேவல் செய்துயர்வோம்

 

எம் ஜென்ம பூமி தாயே!

               எம் கர்ம பூமி நீயே!

எம் புண்ய பூமி தாயே!

    குலதெய்வம் என்றும் நீயே!

 

 

உணவாகி நீரும் ஆகி,

 உடலத்துடன் கலந்தாய்

ஊனாகி உதிரமாகி,

எம்மில் நிறைந்து நின்றாய்

உனக்காகவே எம் வாழ்வு

             உனக்காக சாவும் ஏற்போம்

உனக்காக தொண்டு செய்தே

    வளமோங்கும் நிலை சமைப்போம்

உனதேவல் செய்துயர்வோம்

 

எம் ஜென்ம பூமி தாயே! எம் கர்ம பூமி நீயே!

எம் புண்ய பூமி தாயே! குலதெய்வம் என்றும் நீயே!

 

ஒப்பற்ற இமயம் உந்தன்

       ஒளி வீசும் மகுடமாகும்

முப்புறமும் சூழும் கடல்கள்

   ஓயாது மணிகள் தூவும்

இணையற்ற நாடெம் நாடு

    என்றே முழக்கம் செய்வோம்

கணமேனும் உனை மறந்தே

     உயிர் வாழச் சகிய மாட்டோம்

உனதேவல் செய்துயர்வோம்

 

எம் ஜென்ம பூமி தாயே! எம் கர்ம பூமி நீயே!

எம் புண்ய பூமி தாயே! குலதெய்வம் என்றும் நீயே!

 

நீ காத்த நெறிமுறைகள்

    காலத்தை வென்ற அமுதம்

நீ உறையும் ஆலயங்கள்

   தர்மத்தின் மையமாகும்

பண்பின் பதாகை ஏந்தி

புவியெங்கும் விஜயம் செய்வோம்

பண்பாட்டின் தென்றல் ஆகி

 உள்ளங்கள் குளிர வைப்போம்

உனதேவல் செய்துயர்வோம்.

 

எம் ஜென்ம பூமி தாயே! எம் கர்ம பூமி நீயே!

எம் புண்ய பூமி தாயே! குலதெய்வம் என்றும் நீயே!

 

தாய்ப்பாசம் ஓங்க வைப்போம்

  தனயர்கள் இணைய வைப்போம்

தாய் நாடுயர்த்தும் உணர்வை

   நெஞ்சங்கள் தோறும் வளர்ப்போம்

கைம்மாறு கருதிடாமல்

  கடமைகள் ஆற்ற வந்தோம்

கணமேனும் துஞ்சிடாமல்

பயணம் தொடர்ந்து செல்வோம்

உனதேவல் செய்துயர்வோம்

 

எம் ஜென்ம பூமி தாயே! எம் கர்ம பூமி நீயே!

எம் புண்ய பூமி தாயே! குலதெய்வம் என்றும் நீயே!

வாழ்வாம் மலர்தனை உன்

திருவடிதனில் படைத்தோம்

ஏழேழு பிறவி தோறும்,

உனையே வணங்கி வாழ்வோம்

உனதேவல் செய்துயர்வோம்.

ஜெய்ஹிந்த்.

Tuesday, November 23, 2021

கஞ்சி மாவு

வந்தே மாதரம். கஞ்சி மாவு தயாரிக்கும் முறை 

கேழ்வரகு – 1 கிலோ, தினை – 1 கிலோ, கம்பு - 1 கிலோ,  சிறுபயறு – ½ கிலோ, வெள்ளை சோளம் – ½ கிலோ,பொரிகடலை – ½  கிலோ,வேர்க்கடலை(பச்சை) – ½  கிலோ, புழுங்கல் அரிசி – ½ கிலோ, சம்பா கோதுமை – ½  கிலோ, மக்காச்சோளம் – ½  கிலோ,ஜவ்வரிசி – ¼ கிலோ,பாதாம் - 100 கிராம். ஏலக்காய்- 10 கிராம், சுக்கு- 1 துண்டு

இவற்றை வாங்கி நன்றாக வறுத்து பொடி செய்து நன்றாக கலந்து கஞ்சி போட்டு குடிக்கவும்.

  ஜெய் ஹிந்த்

Wednesday, November 3, 2021

நான்கு யுகங்கள்

 மனிதர்கள் வாழும் காலத்தை நான்கு யுகங்களாக பிரித்து சொல்கிறது புராணங்கள். அதன்படி அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்று நான்கு பிரிவாக உள்ளன.


கிருத யுகம்: இந்த யுகத்தில் மக்கள் அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 21 அங்குலம் (924 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகமானது 17,28,000 வருடங்கள் கொண்டது

திரேதா யுகம்: நான்கில் மூன்று பகுதி மக்கள் அறநெறியுடனும், ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 14 அங்குலம் (616 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகமானது 12,96,000 வருடங்கள் கொண்டதாகும்.

துவாபர யுகம்: சரிபாதி மக்கள் அறநெறியுடனும், மறுபகுதி மக்கள் அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 அங்குலம் (308 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகம் 8,64,000 வருடங்கள் கொண்டது.

கலியுகம்: நான்கில் ஒரு பகுதி மக்கள் அறநெறியுடனும், மூன்று பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 3.5 அங்குலம் (154 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகம் 4,32,000 வருடங்களைக் கொண்டதாகும்.

இந்த நான்கு யுகங்களும் சோ்ந்தது ஒரு ‘மகா யுகம்’ அல்லது ‘சதுா்யுகம்.’ 12 மகா யுகங்களைக் கொண்டது, ஒரு மனுவந்தரம். 14 மனுவந்தரங்களைக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன. தற்போது நடந்து கொண்டிருப்பது 2-வது கல்பமான ‘ஸ்வேத வராக கல்பம்’ ஆகும்.

மனிதர்களின் கால அளவும், தேவர்களின் கால அளவும் வேறுபடும். நமக்கு ஒரு வருடம் என்பது 12 மாதங்கள். ஆனால் தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருடம் என்பது ஒரு நாள். அதன்படி 360 மனித வருடம், தேவர்களின் ஒரு வருடமாகும்.

12,000 தேவ வருடம் என்பது ஒரு சதுர்யுகம். அதாவது 43 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். ஒரு சதுர்யுகம் என்பது நான்கு யுகங்களை கொண்டது என்பதால், 12 ஆயிரம் தேவ வருடங்களை நான்கு யுகங்களாக பிரிக்கலாம். ஒவ்வொரு யுகத்திற்கான தேவ வருடத்தையும், மனித வருடத்தையும் அறிந்து கொள்வோம்.

கிருத யுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடம் - 4,800 தேவ வருடம்.

திரேதா யுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் மனித வருடம் - 3,600 தேவ வருடம்.

துவாபர யுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் மனித வருடம் - 2,400 தேவ வருடம்.

கலி யுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் மனித வருடம் - 1,200 தேவ வருடம்.

மேற்கண்ட நான்கு யுகங்களும் இணைந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுர் யுகம் என்று பார்த்தோம். இப்படி 71 மகா யுகங்கள் கடந்தால் ஒரு மனுவந்தரம் என்று பெயர். மொத்தம் 14 மனுவந்தரங்கள் உள்ளன. இப்போது நாம் இருப்பது 7-வது மனுவந்தரமான ‘வைவசுவதம்’ ஆகும்.

சரி கல்ப காலம் என்பதைப் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். ஒரு கல்ப காலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும். பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பு நிகழ்வும் இருக்காது. எனவே பிரம்மனின் பகல் மட்டும் பிரம்மனின் ஒரு நாள் ஆகும். எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு. பிரம்மனின் கல்ப காலத்தில் 14 மனுவந்தரங்கள் அடங்கும். ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒரு மனு, ஒரு இந்திரன் வீதம், 14 மனுக்கள் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள். (இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே. ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார். இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).

2 மனுவந்தரத்திற்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும். இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”. இந்த காலத்தின் அளவு, நான்கு கலியுகத்தின் காலம் அடங்கியது ஆகும். அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடங்கள். இதே போல் 14 மனுவந்தரத்திற்கு பின்பும் மீண்டும் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். அதுவே பிரம்மனின் இரவு ஆகும். பிரம்மனின் ஒரு பகல் என்பது 71 மகாயுகங்கள் X 14 மன்வந்தரங்கள் = 994 மகா யுகங்கள் மற்றும் 71 X 15 ஸந்தியா காலங்கள் = 2 கோடியே 59 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். அதாவது 6 மகா யுகங்கள்.

ஆக பிரம்மனின் ஒரு பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர் யுகங்கள்). இதையே பிரம்மனின் நாள் என்றும், கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர். இப்படி 360 கல்ப காலம் என்பது பிரம்மனுக்கு ஒரு வருடம் ஆகும். பிரம்மனின் 100 வருடம், ஒரு பிரம்மனின் ஆயுள். ஒரு பிரம்மனின் ஆயுள் முடியும்போது, பெரிய பிரளயம் ஏற்பட்டு, அவரும் கூட ஸ்ரீமன் நாராயணனின் நாபி கமலத்தில் ஒடுங்குவார். தற்போதைய பிரம்மனின் ஆயுள் சரியாக 1,97,29,44,456 மனித வருடங்கள். அதாவது தற்போது பிரம்மனின் வயது 51. பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அனைத்தும் ஒடுங்கும் தருவாய் வர, இன்னும் 49 பிரம்ம ஆண்டுகள் பாக்கியுள்ளது.

அதுவரை யுகங்கள் மாறிக்கொண்டே இருக்கும். தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்ததும் மீண்டும் கிருத யுகம் ஆரம்பிக்கும். அடுத்து திரேதா யுகம், துவார யுகம், மீண்டும் கலியுகம் என்று பிரம்மனின் ஆயுள் முடியும் வரை தொடர்ந்து கொண்டிருக்கும்.

கல்பங்களின் விவரம் :

1.வாமதேவ கல்பம், 2.ஸ்வேத வராக கல்பம், 3.நீல லோகித கல்பம், 4.ரந்தர கல்பம், 5.ரவுரவ கல்பம், 6.தேவ கல்பம், 7.விரக கிருஷ்ண கல்பம், 8.கந்தற்ப கல்பம், 9.சத்திய கல்பம், 10.ஈசான கல்பம், 11.தமம் கல்பம், 12.சாரஸ்வத கல்பம், 13.உதான கல்பம், 14.காருட கல்பம், 15.கவுரம கல்பம், 16.நரசிம்ம கல்பம், 17.சமான கல்பம், 18.ஆக்நேய கல்பம், 19.சோம கல்பம், 20.மானவ கல்பம், 21.தத்புருஷ கல்பம், 22.வைகுண்ட கல்பம், 23.லட்சுமி கல்பம், 24.சாவித்ரி கல்பம், 25.கோர கல்பம், 26.வராஹ கல்பம், 27.வைராஜ கல்பம், 28.கவுரி கல்பம், 29.மகோத்வர கல்பம், 30.பிதிா் கல்பம்.