Monday, April 18, 2011

சக்தி சுரபி

நன்றி முதலில் இங்கு வரும் அனைவருக்கும்.
http://www.vknardep.org. மேற்கண்ட வலை தளம் விவேகானந்த கேந்திரம். அங்கு சென்று மற்றும் vknardep@gmail.com என்ற முகவரிக்கும் மெயில் செய்து சக்தி சுரபி சம்பந்தமான விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். எனக்கும் தெரிவதற்காக மெயில் செய்து உள்ளேன். விவரம் தெரிந்த உடன் பதிவு செய்கிறேன். படிப்பவர்கள் தங்கள் சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள் குறிப்பாக கிராமங்களில் இருப்பவர்களுக்கு இதை சொன்னால் அவர்களுக்கு மிகவும் பயன் கிடைக்கும். எரிவாயுவின் விலை அதிகமாகிக் கொண்டே போகிறது.
இது அதற்கு மாற்று மேலும் பல பயன்களும் உண்டு. நன்றி

Thursday, April 7, 2011

பயனுள்ள கருத்துக்கள்

தலைப்பு பயனுள்ளதாக இருக்கிறது. இந்த பதிவில் விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால் நாம் இணையத்தில் எத்தனையோ விஷயங்களைப் படித்து தெரிந்து கொள்கிறோம். அதை பலரிடமும் இணையத்தை பயன் படுத்தாத ஆனால் அந்த விஷயத்தை உபயோகப் படுத்திக்கொள்ள முடிந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டால் நன்மை எல்லோருக்கும் கிடைக்கும். இதை சொல்லவே இந்த பதிவு!
நன்றி!

மரம் வளர்ப்பு

மதிப்பிற்குரிய பதிவர் ஓம்கார் அவர்களால் அவர்களின் பதிவில் விளக்கப் பட்டபடி மரங்கள் வளர்ப்பு பற்றி பதிவர்கள் முயற்சி செய்து விழிப்புணர்வு ஏற்பட செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நடந்து வரும் அரசால் சென்னையில் செம்மொழிப் பூங்கா அமைக்கப் பட்டு இருக்கிறது. இதை சமீபத்தில் சென்று காணும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்த பூங்காவில் வைப்பதற்காக சீனாவிலிருந்து போன்சாய் மரங்களை இறக்குமதி செய்து இருக்கிறார்கள். இதற்கு எத்தனை கோடி ரூபாய்கள் செலவழிக்கப் பட்டதோ தெரியவில்லை, இருக்கட்டும்.

மக்கள் தங்கள் இருப்பிடங்களில் மரங்களை வளர்த்து நகரத்தின் வெப்பத்தைக் குறைக்க முடியும். புரிந்து கொண்டு அனைவரும் செயல் படுவோம். தெரிந்த ஈடுபடக் கூடிய அனைவரின் ஒத்துழைப் பெற்று செயல் பட்டால் உலகத்தின் வெப்பத்தையே தமிழகத்தால் குறைக்க முடியும்.
நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவது இயல்பே!
ஆனால் இப்போது நாம் மட்டும் நன்றாக வாழ முடிவது , நம் முந்தின தலை முறையினர் செயல் பட்டு இருப்பதாலேயே!
முயற்சியை செய்வோம்!
வெற்றி பெறுவது அடுத்த தலை முறை ஆனாலும் நன்றே!

சக்தி சுரபி

தற்போது தான் சொல்வனம் என்ற இணைய இதழில் சக்தி சுரபி என்ற இயற்கை எரிவாயு வீடுகளுக்கு பயன் படுத்தும் படியாக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்திலிருந்து அங்கு அருகாமையில் உள்ள மக்களுக்கு அறிமுகம் செய்து இருக்கிறார்கள். இதை அவர்கள் செய்து பல வருடங்கள் ஆகிறது. இப்போது தான் தெரிந்து கொள்ள முடிந்தது. சாண எரிவாயு அல்ல இது, காய்கறிக் கழிவுகளை இதற்கு பயன் படுத்துகிறார்கள். இதை படிப்பவர்கள் சொல்வனத்தில் சென்று பார்த்து பயன் பெறுமாறும், தெரிந்தவர்கள் பயன் படக் கூடியவர்களிடமும் இதை சொல்ல வேண்டுகிறேன். இனிமேல் வரக் கூடிய காலங்களில் எரிவாயுவிற்கான மானியம் குறைந்து விலைகள் அதிகமாகும் முன்னாலேயே நம்மால் முடிந்த அளவு செயல் பட வேண்டும்! சிறு நகரங்களில் தனி வீடுகளில் வசிக்கும் மக்கள், பெரு நகரங்களில் குழுவாக தனி வீடுகளில் வசிக்கும் மக்களும் இதை நன்றாக பயன் படுத்த முடியும்! அரசுகளை குறை சொல்வதை குறைத்துக் கொண்டு நம்மால் முடிந்த அளவு இயற்கைக்கு இசைந்த அளவு வாழப் பழக வேண்டும்!

தேர்தல்

அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அனைவரும் தங்கள் வாக்குகளை மறக்காமல் செலுத்தி விடுங்கள்.
நன்றி!