Wednesday, May 5, 2010

நவக்ரஹ துதி

கணபதி காப்பு
முதல்வன் கணபதி முந்தி நின்றிந்தப்
பதமார் நவக் கோள்பாவினைப்படிப்போர்
நிதமும் செல்வம் நிலவும் எல்லா
இதமார் நலமும் எய்திட காப்போம்!

சூரியன்
சூரியன் என்னும் சோதிடச் சுடரொளி த்தேவன்றானை ப்
பாரினிற்ப் பற்றி என்றும் பாங்குடன் போற்றி செய்யும்
சீருடை மாந்தர் யாரும் செல்வமும் புகழும் சேயும்
சேர்ந்திடப் பெற்று நன்மை துய்த்தவன் அருள் கொள்வாரே!

சந்திரன்
வாரமாம் மொற் சோமன் விளங்கிடும் நாளும் ஒன்று
சேர்வே உள்ளத் தந்தச் சதிர் மதிப் பாதம் போற்றின்
கோரிடும் வெற்றியெல்லாம் கொள்ளுவர் மக்கள் என்றும்
ஆர்வமாய் அயன் மேல் பக்தி ஆற்றலும் கடமையாமே!

செவ்வாய்
ஆமேநம் செயல்கள் யாவும் அளவிலா மேன்மை சேரும்
ஆமேநம் வாக்கின் வாழ்த்து அனைவரும் வியக்கும் வண்ணம்
ஆமே பன்னவனும் அந்த அருங் கிரக செவ்வாயதனால்
ஆமேநம் பாதுகாப்பும் அச்செவ்வாய் அருளதாலே!

புதன்
செய்தலால் ஆகும் பொன்னும் செய்யாத பெருமையெல்லாம்
செய்பவன் புதனே யாதலால் சீருடன் அவனைப் போற்றி
செய்பவர் என்றும் பூவில் செவ்வராய்ப் பேரு யாவும்
எய்திடப் பெறுவர் புதனில் எழிலடி காப்பதாமே!

வியாழன்
குருவிலா வித்தை பாழாம் குணமிலாப் பெண்டிர் பாழாம்
பெருமதி குருவாம் வியாழன் பூசையை ப் புரிவோர் யாரும்
அருநிதிக் கல்வி ஞானம் அனைத்து நல்வித்தை குணமும்
உறுதியாய் பெறுவராமல் உயர்குரு சரண் என்போமே!

சுக்ரன்
சுக்கிரன் கடைக்கண் பார்வை சூழ்ந்திட பெற்றவர்க்கு
அக்கரை ஏதுமில்லை அனைத்துமே அவர்க்கே சொந்தம்
பக்தியாய் பணிவோர்க்கு எல்லாம் புரிகுவான் அருளாம் மாரி
சக்தி சேர் சுக்கிரன்றனை சந்ததம் துணை கொள்வோமே!

சனி
சனித்த மானிடர்கள் நல்ல சென்மமாய் வாழ்வதற்காகத்
தனிப்பெரும் மகிமை வாய்ந்த தகை சுடர் மகனாம் காரி
எனப்புகல் சனியின் பாதம் இறைஞ்சுதல் வேண்டும் வேண்டும்
இனிப்புறக் காக்கச் சனியை எண்ணி நாம் போற்றுவோமே!

ராகு
அமரர்கள் அமுதம் கண்ட அத்தினம் புகழே கொண்ட
அருங்கிரகமாகும் ராகு அடியினை நாளும் ஏற்றி
அகிலமேல் நன்கு வாழ்வோம் அவனருள் நமக்கேயாகும்
புகலரும் கீர்த்தி செம்மல் புனிதரும் ராகு போற்றி!

கேது
சேதுவிற் சென்று மூழ்கி சிவராமன் பதம் போற்றி
மேதகு மகப்பேறடையும் மாபெரும் பாக்கியத்தை
கேதுவாம் கிரஹத்தை பணிவோர் கை வரப் பெறுவாராமால்
தீதது கேதுவே நின் துதி செயும் தமியேற்கருள்வாயே!