Saturday, December 18, 2010

ஆலயம்

எல்லாம் வல்ல சத்குருவின் அருளாலே நேற்று முன்தினம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றோம். தரிசனம் நன்றாக இருந்தது. ஏற்கனவே பல பதிவர்களால் சிதம்பரம் கோவிலில் பிரச்னைகளைப் பற்றி பதிவு எழுதப் பட்டு அதைப் படித்தோம். இப்போது நம் கருத்தைப் பதிவு செய்ய இந்தப் பதிவு.
எல்லாக் கோவில்களையும் அரசு தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வர நினைப்பது கோவில்களை சரிவரப் பராமரிப்பதற்காக இல்லை. பல கோவில்களின் நிலையைப் பார்த்தாலே இது புரிகிறது. கோவில்களில் உள்ள சக்தி எல்லோருக்குமே கிடைக்க வேண்டும் என்று தான் கோவில்கள் உள்ளன. அதற்கு கோவில்களின் சரியான பராமரிப்பு மிகவும் முக்கியம்.