Monday, July 6, 2020

மருந்து எண்ணெய்


 மருந்து எண்ணெய்
கஸ்தூரி மஞ்சள் – 10 கிராம்
கடுக்காய் – 10 கிராம்
வால்மிளகு – 10கிராம்
கார்க்கோல் அரிசி - 10கிராம்
பூலாங்கிழங்கு - 10கிராம்
களிப்பாக்கு - 10கிராம்
கருஞ்சீரகம் -10கிராம்
வசம்பு -10கிராம்
வேம்பாளம்பட்டை -10கிராம்
எல்லாவற்றையும் வெயிலில் காய வைத்து பொடி செய்து
தேங்காய் எண்ணெய் –  ½ லிட்டர் காய்ச்சி,கடைசியில் பொடியைப் போட்டு, கொஞ்சமாக கிண்டி விட்டு இறக்கி வைக்கவும். காயங்களில் போட்டு வர குணமாகும். வெட்டுக்காயங்களுக்கும், சொறி சிரங்கு,புண் எல்லாவற்றிற்கும் உபயோகிக்கலாம்.

வாயு பொடி


வாயு பொடி
மிளகு – 50கிராம்
சீரகம் - 50கிராம்
சுக்கு - - 50கிராம்
திப்பிலி - 50கிராம்
கசகசா - 50கிராம்
பெருங்காயம்(கட்டி) - 50கிராம்
ஓமம் - 50கிராம்
கருஞ்சீரகம் - 25கிராம்
இந்துப்பு – 2 ஸ்பூன்.
எல்லாவற்றையும் வறுத்து பொடி செய்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
வாயு பிடிப்பு, புளித்த ஏப்பம், போன்றவைகளுக்கு உபயோகிக்கலாம்.
எண்ணெய் தேய்த்து குளித்த உடன் கொஞ்சம் சாப்பிடவும், வாயு தொந்தரவு இருக்காது.    

பிள்ளை பெற்றாள் மருந்து


பிள்ளை பெற்றாள் மருந்து

16 மூலிகைகள்
மஞ்சள் சிறியது -2,
நறுக்கு மூலம் – 500 கிராம்,
திப்பிலி – 200 கிராம்,
வாயுவிளங்கம் – 200 கிராம்,
சுக்கு – 250 கிராம்,
ஓமம் – 100 கிராம்,
அக்கரா – 100 கிராம்,
சித்தரத்தை – 100 கிராம்,
ஜாதிக்காய் – 2,
ஜாதிபத்திரி – 25 கிராம்,
கொத்தமல்லி விதை – 100 கிராம்,
கசகசா – 100 கிராம்,
மிளகு – 250 கிராம்,
அதிமதுரம் – 100 கிராம்,
அதிவதயம் – 50 கிராம்,
ஜீரகம் – 100 கிராம்
எல்லாவற்றையும்
நருக்குமூலம்,சுக்கு,அதிமதுரம்,அதிவதயம்,மஞ்சள் இதெல்லாம் தட்டிவிட்டு இடிக்கவேண்டும்.
எல்லாவற்றையும் வெயிலில் காய வைத்து வறுத்து பொடி செய்து மொத்தமாக க் கலந்து வைக்கவும்.
கொஞ்சகொஞ்சமாக 100கிராம் – கருப்பட்டி,
4 ஸ்பூன் பொடி,4ஸ்பூன் நெய்,4 ஸ்பூன் நல்லெண்ணெய், தேன் சேர்த்து
கருப்பட்டியை தண்ணீரில் போட்டு கரைத்து வடிகட்டவும்.
வடிகட்டிய கருப்பட்டி தண்ணீரில் கொதிக்க வைத்து கொதிக்கும்போது 4 ஸ்பூன் பொடியை போடவும்.
கிளறி விட்டு தேன் விட்டு கெட்டியாக வரும்போது 4ஸ்பூன் நெய், 4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கிண்டி எடுத்து வைக்கவேண்டும்.
கெட்டியாக உருண்டையாக லேகிய பதம்.
வைக்கவேண்டும்.

இப்படியில்லையெனில்,
பாதியளவு வாங்கிக்கொண்டு இஞ்சிச்சாறு ( 200 கிராம் இஞ்சி வாங்கி தோல் சீவி அரைத்து) எடுத்து, கருப்பட்டி 1 ½ கிலோ, நெய் – 200 கிராம்.
கருப்பட்டி தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதிக்கும்போது இஞ்சிச்சாறு விட்டு பொடி எல்லாம் போட்டு கிளறும்போது கெட்டியாகும்போது தேன்,நெய்,நல்லெண்ணெய் விட்டு கிளறி வைக்கவேண்டும்.

Tuesday, May 26, 2020

ஸ்ரீகணேச பஞ்சரத்னம்


ஸ்ரீகணேச பஞ்சரத்னம்

1.முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலா தராவதம்ஸகம் விலாஸி லோகரக்ஷகம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசுபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்

2.நதேதராதி பீகரம் நவோதிதார்க்க பாஸ்வரம்
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாப  துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் தமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

3.ஸமஸ்தலோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

4.அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரி பூர்வநந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்

5. நிதாந்தகாந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்தஹீன மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம்
தமேகதந்த மேகமேவ சிந்தயாமி ஸந்ததம்

6.மஹாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரண் கணேச்வரம்
அரோகதாம் அதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயு ரஷ்டபூதிமப்யுபைதி ஸோசிராத்.

ஸ்ரீஆதிசங்கரர் நாமாவளி


ஸ்ரீஆதிசங்கரர் நாமாவளி  

ஸ்ரீமத் சங்கர ரூப குரோ
காமித விதரண லோக குரோ
விபுத ப்ரார்த்தித லோக குரோ
அபுத மதாந்த ஸுதீப குரோ
கலிபாதித ஸந்த்ராஸ குரோ
காலட்யுத்பவ லோக குரோ
ஸ்தாபித ஷண்மத ஸார குரோ
தாபாபஹ முனி வந்த்ய குரோ
உக்தாத்வய ஸத் விஜய குரோ
சப்தாத் வக்ஷர சாந்த குரோ
கருணா ஸாகர பரம குரோ
நிருபம மஹிமா நிலய குரோ
ஜய ஜய சங்கர லோக குரோ
ஜய சுப மங்கள ரூப குரோ
பவ ஹர சங்கர புவன குரோ
ஜய சுப மங்கள ஜகத் குரோ
ஜய ஜய ஜய சிவரத்ன குரோ
ஜய சுப மங்கள லோக குரோ
ஜய ஜய ஜய ஞானானந்த குரோ
ஜய சுப மங்கள ஜகத்குரோ

ஜய ஜய ஸ்வாமி ஹரிதாஸ குரோ
ஜய சுப மங்கள லோக குரோ
ஜய ஜய ஸ்வாமி நாமானந்த குரோ
ஜய சுப மங்கள ஜகத் குரோ

ஸ்ரீநாராயணீ நாமாவளி


ஸ்ரீநாராயணீ நாமாவளி   

பாஹி பாஹி நாராயணீ
ஸ்ரீபரமேச்வரி நாராயணீ
பாஹி பாஹி நாராயணீ

ஸ்ரீசக்ர வாஸினி நாராயணீ
சக்தி ஸ்வரூபிணி நாராயணீ
பாஹி பாஹி நாராயணீ

ஓங்கார ரூபிணி நாராயணீ
விச்வவிமோஹினி நாராயணீ
பாஹி பாஹி நாராயணீ

அம்ப பவானி நாராயணீ
ஜெகதம்ப பவானி நாராயணீ
பாஹி பாஹி நாராயணீ

தீனதயாபரி நாராயணீ
ஹே ஜகதீச்வரி நாராயணீ
பாஹி பாஹி நாராயணீ

ஜனமன ரஞ்சனி நாராயணீ
ஜகதோத்தாரிணி நாராயணீ
பாஹி பாஹி நாராயணீ
ஸ்ரீபரமேச்வரி நாராயணீ
பாஹி பாஹி நாராயணீ

தீபஜோதி


தீபஜோதி    

தீபஜோதியாய் வருவாய் நீ தீப ஜோதியாய் வருவாய்
திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

1.உனதருள் உளதேல் உலகாம் – இன்றேல்
உலக வாழ்வு கொடும் நரகாம்
தனதானிய ஸௌபாக்கியம் தருவாய்

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

2.பாற்கடல் உதித்த பொற்கொடியே – உந்தன்
பார்வை பெற்றவர்க்கேதும் எளிதாம்
சேர்த்தபின் பயனுறும் செல்வமும் தருவாய்

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்
3.வீரத்திருமகளின் நோக்கம் – எல்லா
வெற்றியளிக்கும் மன ஊக்கம்
சீரும் சிறப்பும் மனத்திறமையும் தருவாய்

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

4.செந்தாமரை வளர் ஒளியே – ஐயன்
திருமார்பினுள மணியே
என் தாய் நினதருள் வாழ்க வாழ்க நீ

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

5.கமலநயனமிகும் கருணை – எந்தன்
கவிகள் பாடுமிடம் பொழிவாய்
வம்சமுழுதும் எனக்கருள் வரம் தருவாய்

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

6.தோகை நினதருளின் துணையால் – நான்
தொட்டதனைத்தும் பயனளிக்கும்
யோக போக சுக வாழ்க்கையும் தருவாய்

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

ஸ்ரீஸத்குரு துதி


ஸ்ரீஸத்குரு துதி    

1.காலத்தை வென்றொளி சேர் மேனி கொண்டான்
கவின்முறுவல் மறையாத வதனம் கொண்டான்
ஞாலத்தில் குழந்தைக்கும் குழந்தையாகி
ஞானமுடையோர்க்கு அறிவின் மன்னராகி
சீலத்தில் பெரியோரெல்லாம் வணங்கியேத்த
திருவடியால் சிரம் அணிந்த செம்மல் ஆகி
கோலத்தில் துறவரசாய் நின்றான் எங்கள் குரு
ஞானானந்தன் எனும் தேசிகேசன்

2.அஞ்சு பொறியடக்கி மனம் அடக்கி மோன
ஆலயத்தில் நிராசையெனும் தூபம் காட்டி
விஞ்சுமுப சாந்தமெனும் விளக்கேற்றி
விருமான ஆனந்தம் நிவேதனம் செய்து
துஞ்சிவரும் அடியார்க்கு உறுதி காட்டும்
உயர் பூசை செய்கின்றான் கோவலூரில்
கிஞ்சுகம் சேர் தபோவனத்தில் வாழும் மூர்த்தி
கிளர் ஞானானந்தன் எனும் ஆசான் அம்மா! அம்மா!
கிஞ்சுகம் சேர் தென்னாங்கூரில் வாழும் மூர்த்தி
கிளர் ஞானானந்தன் எனும் ஆசான் அம்மா! அம்மா!

ஸ்ரீசரணம்  
 ஞான கணேசா சரணம்! சரணம்!
ஞான ஸ்கந்தா சரணம்! சரணம்!
ஞான புரீசா சரணம்! சரணம்!
ஞானாம்பிகையே சரணம்! சரணம்!
ஞான ஸத்குரோ சரணம்! சரணம்!
ஞானானந்தா சரணம்! சரணம்!

Tuesday, April 7, 2020

அபிராமி அந்தாதி


அபிராமி அந்தாதி

காப்பு
தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும்தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே.

நூல்
1.
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே

2
துணையும், தொழும்தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதிகொண்ட வேரும்பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே

3.
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், உனது திருவடிக்கே,. திருவே! வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழுநரகுக்கு உறவாய மனிதரையே!

4.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து சென்னிக்
குனிதரும், சேவடிக்கோமளமே! .கொன்றை வார்சடைமேல்
பனிதரும், திங்களும், பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும்மென்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

5.
பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதுக்கிய அம்பிகை அம்புயம் மேல்
திருந்திய சுந்தரி, அந்தரி, பாதம் என் சென்னியதே.

6.
சென்னியது உன்பொற் திருவடித்தாமரை. சிந்தையுள்ளே
மன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே

7.
ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும், வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே!

8.
சுந்தரி, எந்தை துணைவி, என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி, சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

9.
கருத்தன, எந்தைதன் கண்ணன் வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே! வந்து என்முன் நிற்கவே

10.
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

11.
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான்ந்தமான, சரணார விந்தந் தவளநிறக்
கானம்ந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

12.
கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்துபக்தி
பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து. நான்முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே!

13.
பூத்தவளே! புவனம் பதினான் கையும் பூத்தவண்ணம்
காத்தவளே! பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே! உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

14.
வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப்பர மானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம்- எம்பிராட்டி! நின் தண்ணளியே!

15.
தண்ணளிக்கு என்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார்,
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர்தம்
விண்ணளிக்கும் செல்வமும், அழியாமுத்தி வீடும், அன்றோ?
பண்ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே!

16.
கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே!

17.
அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய வானன சுந்தரவல்லி, துணை இரதி
பதிசய மானது அபசயம் மாக, முன் பார்த்தவர் தம்
மதிசய மாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே.

18.
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல்வரும் போது, வெளிநிற்கவே

19.
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே
தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே!

20.
உறைகின்ற நின்திருக் கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சகமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே?
21. மங்கலை, செங்கலை, சம்முலை யாள், மலையாள், வருணச்
சங்குலை செங்கைச் சகலகலாமயில் தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும்பெண் கொடியே!

22.
கொடியே, இளவஞ்சிக்கொம்பே- எனக்கு வம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

23.
கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாதான்பர் கூட்டம் தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தேவிளைந்த
கள்ளே, களிக்கும் களியே, அளிய என்கண்மணியே.

24.
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த
அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே.
பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே.

25.
பின்னே திரிந்து, உன் அடியாரைப்பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்றுகொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.
என்னே இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.

26.
ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம், கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின்தாளிணைக்குகென்
நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு நகையுடைத்தே.

27.
உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை, சுந்தரி ! நின் அருள் ஏதென்று சொல்லுவதே?

28.
சொல்லும் பொருளும் என, நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே, அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

29.
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும்பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம்முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

30.
அன்றேதடுத்தென்னை ஆண்டுகொண்டாய், கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கினி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.

31.
உமையும் உமையொரு பாகரும் ஏக உருவில்வந்ததிங்
கெமையும் தமக்கன்புசெய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும், அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.

32.
ஆசைக்கடலில் அகப்பட்டு, அருள் அற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தைஎன் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே.

33.
இழைக்கும் வினைவழியே அடும் காலன் எனை நடுங்க,
அழைக்கும் பொழுதுவந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும்பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே

34.
வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்,
பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும், பாகமும் பொற்
செந்தேன் மலரும், அலர்கதிர் ஞாயிறும், திங்களுமே.

35.
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட் கொருதவம் எய்தியவா, எண் இறந்தவிண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம்எய்து மோதரங் கக்கடலுள்
வெங்கட்பணி அணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே.

36.
பொருளே, பொருள்முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும்தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகியிருக்கும் உன்தன்
அருள் ஏதறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே.

37.
கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை, விடஅரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே.

38.
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.

39.
ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என் குறை, நின்குறையே அன்று, முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே.

40.
வாள்ணுதற் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்தி றைஞ்சிப்
பேணுதற் கெண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணுதற் கண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்குகெண்ணிய எண்ணம்ன்றோ, முன்செய் புண்ணியமே.
41. புண்ணியம் செய்தனமே மனமே. புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே.

42.
இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகிமுத்து
வடங்கொண்ட கொங்கைமலை கொண்டிறைவர் வலியநெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி, நல்லரவின்
படம்கொண்ட அல்குல் பணிமொழி, வேதப் பரிபுரையே.

43.
பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள்! தீமைநெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப் புச்சிலைக்கை,
எரிபுரை மேனி, இறைவர்செம் பாகத்து திருந்தவளே.

44.
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்
அவளே, அவர்தமக்கு கன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்,
துவளேன், இனியொரு தெய்வம் உண்டாகமெய்த்தொண்டு செய்தே.

45.
தொண்டு செய்யாது நின்பாதம் தொழாது, துணிந்தச்சையே
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின்வெறுக்கை அன்றே.

46.
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரைமிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே, புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே!
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானு உன்னை வாழ்த்துவனே.

47.
வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும், பருவரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

48.
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து, நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போதருப்பார், பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே?

49.
குரம்பை அடுத்து குடி புக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து
அரம்பையடுத்து அரிவையர் சூழவந்து, அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்த இசைவடி வாய் நின்ற நாயகியே.

50.
நாயகி நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய்கி, மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆயகியாதிய உடையாள் சரணம் அரண் நமக்கே.

51.
அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்தபெம் மானும் முகுந்தனுமே,
சரணம் சரணம்என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.

52.
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,- பிறைமுடித்த
ஐயன் திருமனை யாள் அடித்தாமரைக்கு அன்புமுன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.

53.
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலும், கண்மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இதுபோலும் தவம் இல்லையே.

54.
இல்லாமை சொல்லி, ஒருவர்தம் பாற் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால், ஒருகாலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

55.
மின் ஆயிரம் ஒரு மெய்வடி வாகி விளங்குகின்றது
அன்னாள், அகமகிழ் ஆனந்த வல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு எங்குமாய், முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்றுல்லையே.

56.
ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து, இவ் வுலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கிநிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்ற வா. இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.

57.
ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டம்மெல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும்போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ, உன் தன் மெய்யருளே?

58.
அருணாம் புயத்தும், என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயமுலைத் தையல்நல்லாள், தகைசேர்நயனக்
கருணாம் புயமும், வதனாம் புயமும், கராம் புயமும்,
சரணாம் புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.

59.
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று, உன்தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள் சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.

60.
பாலினும் சொல்இனியாய். பனிமா மலர்ப் பாதம் வைக்க
மாலினும், தேவர்வணங்க நின்றோன் கொன்றைவார் சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும், சாலநன்றோ அடி யேன்முடை நாய்த்தலையே

61. நாயேனையும் இங்கு ஒருபொருளாக நயந்து வந்து,
நீயேநினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய், என்ன பேறு பெற்றேன்
தாயே, மலைமகளே செங்கண் மால்திரு தங்கைச்சியே.

62.
தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய் அடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்டநாயகி, கோகனகச்
செங்கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.

63.
தேறும் படிசில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றிற் கொட்டும் தறிகுறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்,
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.

64.
வீணே பலி கவர் தெய்வங்கள் பாற்சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன், ஒருபொழுதும், திருமேனிப்ரகாசமன்றிக்
காணேன், இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.

65.
ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவம்பெரு மாற்குத் தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு கிரு மூன்றுஎனத்தோன்றிய மூதறிவின்
மகனும்உண் டாயதன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே.

66.
வல்லபம் ஒன்றறியேன், சிறியேன், நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லதுபற்று ஒன்றுஇலேன், பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினை யேன்தொடுத்த
சொல் அவ மாயினும், நின்திரு நாமங்கள் தோத்திரமே.

67.
தோத்திரம்செய்துதொழுது, மின்போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தோறும்
பாத்திரம் கொண்டு பலிக்குஉழலா நிற்பர் பார் எங்குமே.

68.
பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீரடிக்கே
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.

69.
தனம்தரும், கல்விதரும், ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும், தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம்தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள், அபிராமி கடைக்கண்களே.

70.
கண்களிக் கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக் கும்குரல் வீணையும், கையும் பயோதரமும்
மண்களிக் கும்பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெரு மாட்டிதன் பேரழகே.

71.
அழகுக்கு கொருவரும் ஒவ்வாத வல்லி, அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றநெஞ்சே. இரங்கேல், உனக்கென் குறையே.

72.
எங்குறை தீரநின்று றேத்துகின்றேன், இனி யான்பிறக்கின்,
நின்குறையே அன்றி யார்குறை காண்இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்
தன்குறை தீர, எம்கோன்சடை மேல்வைத்த தாமரையே.

73.
தாமம் கடம்பு, படைபஞ்ச பாணம், தனுக்கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுதெமக்கென்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கொளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடிரண்டு நயனங்களே.

74.
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப்
பயனென்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

75.
தங்குவர் கற்பகத். தாருவின் நீழலில், தாயர்இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும், பூத்தஉந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

76.
குறித்தேன்மனத்தில், நின்கோலம் எல்லாம், நின்குறிப் பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணி பிரான் ஒருகூற்றை, மெய்யில்
பறித்தே குடி புகுதும் பஞ்ச பாணபயிரவியே.

77.
பயிரவி, பஞ்சமி, பாசாங் குசைபஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர்சண்டி, காளி, ஒளிரும்கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.

78.
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி, அணிதரளக்
கொப்பும் வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே.

79.
விழிக்கே அருளுண்டு, அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு, அவ்வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்களே செய்து, பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே?

80.
கூட்டியவா என்னை தன் அடியாரில், கொடியவினை
ஓட்டியவா என்கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம்! ஆடகத் தாமரை ஆரணங்கே.
81. அணங்கே. அணங்குகள் நின்பரி வாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
இணங்கேன், எனதுன தென்றிருப் பார்சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவொன்றிலேன் என்கண் நீவைத்த பேரளியே.

82.
அளியார் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை உள்ளுந்தொறும்
களியாகி, அந்தக்கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே.

83.
விரவும் புதுமலர் இட்டுநின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்சவல்லார் இமையோர் எவரும்
பரவும், பதமும், அயிராவதமும், பகீரதியும்
உரவும் குலிகமும் கற்பகக் காவும் உடையவரே.

84.
உடையாளை ஒல்குசெம்பட்டுடையாளை ஒளிர்மதிச்செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கு நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மானிடையாளை இங்கென்னை இனிப்
படையாளை உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.

85.
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறைவண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
வார்க்கும் குங்குமமுலையும், முலைமேல் முத்துமாலையுமே.

86.
மால் அயன் தேட மறைதேட வானவர்தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்பு
வேலைவெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.

87.
மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்த, என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால், விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டாளும் பராபரையே.

88.
பரம் என்றுனை அடைந்தேன், தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற,கை யான் இடப்பாகம் சிறந்தவளே.

89.
சிறக்கும் கமலத்திருவே. நின் சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும், துரியமற்ற
உறக்கம் தரவந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுதுதென்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.

90.
வருந்தாவகை, என் மனத்தா மரையினில் வந்து புகுந்
திருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒருபொருள் இல்லைவிண் மேவும் புலவருக்கு
விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

91.
மெல்லிய நுண்ணிடை மின்னையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன்னை யாளைப் புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம்தொழும் அடியாரைத் தொழும. அவர்க்குப்,
பல்லியம் ஆர்த்து எழ வெண்பக டூரும் பதம் தருமே.

92.
பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி, உன்றன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய் இனி, யான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்
முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே.

93.
நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே, முகிழ்முலை மானே, முதுகண் முடிவுயில் அந்த
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே, இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

94.
விரும்பித் தொழும் அடியார்விழி நீர்மல்கி, மெய்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி, அறிவிழந்து,
கரும்பிற் களித்து, மொழிதடு மாறி முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவரென்றால் அபிராமி சமயம் நன்றே.

95.
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம் எனக் குள்ளம்வெல்லாம்
அன்றே உனதென் றளித்துவிட்டேன். அழியாதகுணக்
குன்றே, அருட்கடலே. இம வான்பெற்ற கோமளமே.

96.
கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில்வைகும்
யாமள வல்லியை, ஏதமிலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத், தம்மால்
ஆமள வும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே.

97.
ஆதித்தன், அம்புலி அங்கி, குபேரன், அமரர்தங்கோன்,
போதில் பிரமன், புராரி, முராரி பொதியமுனி
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன்முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர்- போற்றுவர் தையலையே.

98.
தை வந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே
மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகல் அறியாமடப் பூங்குயிலே.

99.
குயிலாய் இருக்கும் கடம்பாட வியிடை, கோல இயன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

100.
குழையைத்தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத் திருநெடுந் தோளும், கருப்புவில்லும்
விழையப் பொருதிறல்வேரியம் பாணமும், வெண்ணகையும்
உழையைப் பொருக்கண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!

நூற்பயன்
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, அங்குச பாசங்குசமும் கருப்பும் அங்கையிற் சேர்த்தாளை
முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.