Wednesday, December 3, 2014

ஸ்ரீமதி ஜானகி ராமச்சந்திரன் ( வக்கீல் மாமி )



                                                             

ஸத்குருபாதம் துணை

எல்லாம் வல்ல ஸத்குருமூர்த்தியின் திருவருள் எங்கும் நிறைந்துள்ளது.
” யத்ராஸ்தி போகோ ந ச தத்ர மோக்ஷ:
      யத்ராஸ்தி மோக்ஷோ ந ச போக: |
ஸ்ரீசுந்தரீஸாதகபுங்கவானாம் போகஸ்ச
மோக்ஷஸ்ச கரஸ்த ஏவ || “
போகத்தைத் தரும் மார்க்கங்கள் மோக்ஷத்தைத் தருவதில்லை. மோக்ஷத்தைத் தரும் இதர யோகாதி மார்க்கங்கள் போகத்தைத் தருவதில்லை.
ஸ்ரீவித்யா உபாஸ்தி செய்துவரும் சாதகச்ரேஷ்டர்களுக்கு
போகமும் யோகமும் கைமேலேயே இருக்கின்றன என்பதற்கு உதாரணமாகவே வாழ்ந்து எங்கும் நிறைந்திருக்கிறார்கள் ஸ்ரீமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்கள்.

சிறந்த சிஷ்யனைத் தேடி குரு தானே வருவார் என்பதற்கும் உதாரணமாக சிறந்த குரு மூலமாகவே ஸ்ரீ வித்யா உபாசனையை அடைந்து எப்போதும் அம்பாள் நினைவிலேயே, தன் வாழ்வை சிறந்த முறையில் நடத்தித் தானே மற்ற பெண்மணிகளுக்கு சிறந்த உதாரணமாகவும் விளங்கி வந்தார்கள்.


அவர்கள் போல நம்மாலும் ஜபம் செய்ய முடியுமா? என்ற மலைப்பை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள்.
தனக்காக மட்டுமல்ல எல்லோருக்காகவும் நாள் முழுதும் ஜபம் செய்து கொண்டே, காரியங்களையும் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

ஸ்ரீபாஸ்கரப்ரகாச ஆஷ்ரமத்தின் முக்கிய வெளியீடாக ” ஸ்ரீவித்யா நித்யானுஷ்டானம் “ வெளிவரச் செய்து பல உபாஸகர்களுக்கு ” ஸ்ரீசக்ர ந்யாஸம் “
முதலான பல விஷயங்கள் தெரிந்துகொள்ள முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார்கள்.

எப்போதும் எல்லோருக்காகவுமே வாழ்ந்து இப்போதும் எங்கும் நிறைந்துள்ளார்கள்.

எல்லாம் வல்ல ஸத்குருமூர்த்தியின் திருவருள் எப்போதும் நம்மை வழி நடத்தப் ப்ரார்த்தனை.
  ஸர்வ சைதன்ய ரூபாம் தாம் ஆத்யாம் வித்யாம் ச தீமஹி புத்திம் யான: ப்ரசோத்யாத்.