Saturday, December 10, 2011

சமச்சீர் கல்வி

சென்னையில் மேற்கு மாம்பலத்தில் சக்கரபாணித் தெருவில் அமைந்துள்ள கலா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ள உள்ளது.
காரணங்கள் தமிழக அரசு, மற்றும் அரசியல் வாதிகளின் தேவை இல்லாத செயல் பாடுகள்.
தமிழக அரசு தனது போக்குவரத்துக் கழகம், ஆவின், மின்சாரவாரியம் இவற்றின் தேவை மக்களுக்குத் தொடர்ந்து கிடைக்க விலைகளை உயர்த்தி உள்ளது போலவே, பள்ளிகளும் நியாயமான அளவு கட்டணங்கள் வசூலிக்க அனுமதிக்க வேண்டும். சிறந்த அளவில் இந்தப் பகுதியில் கல்விக்காக 26 வருடங்களாக சேவை புரிந்து வரும் ஒரு அறக் கட்டளை இது.
ராமகிருஷ்ண மிஷனின் பள்ளியை விட குறைந்த கட்டணம் வாங்கும் பள்ளி இது.
ஆனாலும் தமிழக அரசு தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரே அளவாக கட்டணங்கள் பெறச் சொன்னால் எவ்வாறு பள்ளியின் மற்ற செலவுகளை சமாளிப்பது?
அரசாங்கம் வெறும் கண்துடைப்பாக காரியங்களை செய்யக் கூடாது.

Thursday, December 8, 2011

விலைவாசி

விலைவாசி உயர்வை மட்டுமே பேசுகின்ற அனைவருமே அரசு குறிப்பாக மத்திய அரசு உலகம் முழுவதும் பதுக்கி வைக்கப் பட்டுள்ள இந்தியர்களின் பணத்தை திரும்பக் கொண்டு வர எந்த முயற்சியும் செய்யவில்லை.
ஒரு நண்பரிடம் வெளிநாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் அனுமதிப்பதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும்போது இந்தியாவில் ஏற்பட்ட வெண்மைப் புரட்சி, பசுமை புரட்சிகளைப் பற்றி குறிப்பிட்டார். அரசாங்கங்கள் விவசாயிகளுக்கு சரியான பாதுகாப்பு அளிக்க வேண்டும். விவசாயிகளின் பொருள்களுக்கு சரியான விலை கிடைக்க செய்ய வேண்டும்.
அவர்களின் விளை பொருள்கள் வீணாகாமல் தடுக்க வேண்டும்.