Tuesday, July 3, 2012

தாம்ரபரணி

எல்லாம் வல்ல சத்குரு மூர்த்தியின் திருவருளால் இன்று தென் பொதிகை மலையின் ஆபரணமாம் தாம்ரபரணி நதியைப் பற்றி சில விஷயங்கள் எழுத நினைக்கிறேன். 
பல பெரியவர்கள் நடந்த முறையினைப் பின்பற்றி நாமும் நடக்க இறைவனின் துணையை நாடுவோம்.

சிறந்த தவ சீலரும் பௌராணிகர்களில்  சிறந்தவருமான சூத மாமுனிவர்,
ஒரு சமயம் பாரத பூமி முழுவதும் சஞ்சாரம் செய்து அநேக ஆலயங்களையும் புண்ணிய தீர்த்தங்களையும் தரிசித்து பின்னர் நைமிசாரண்யம் என்னும் சௌனகாதி முனிவர்கள் கூடி இருந்த  இடத்தை அடைந்தார்.  அங்கு அந்த தவ சீலர்கள் கேட்டுக் கொண்ட படி தனது யாத்திரை விவரங்களை தெரிவிக்கும் பொழுது அதிசய நதியான தாம்ர பரணியை ப்பற்றி கூறினார்.. 



Wednesday, February 15, 2012

அரசு

தற்போதைய தமிழக அரசு சிறப்பாக செயல் படவேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். மின்பற்றாக்குறை தீரவில்லை. சென்னை தவிர மற்ற இடங்களில் பல மணிகள் மின் வெட்டு ஏற்படுகிறது. இலவச மின்சாரம் தேவையானவர்களுக்கு மட்டும் வழங்கினால் பொது மக்களுக்கு இன்னும் அதிக அளவு மின்சாரம் கொடுக்க முடியும்.
தேவையில்லாமல் கூடங்குளம் பிரச்னை நீடித்துக் கொண்டே போனால் மின்பற்றாக்குறை சமாளிக்க முடியாமல் போகும்.
சென்னையிலும் அதை சுற்றி அமைந்துள்ள பல வசதியான கல்லூரிகளையும் பெரிய அளவு வணிக நிறுவனங்களையும் சூரிய ஒளி மின்சாரம் பயன் படுத்த வற்புறுத்த வேண்டும்.
தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் பயன் படுத்த வேண்டும். தெரு விளக்குகளுக்கும் சூரிய ஒளி பயன் படுத்தினால் பொது மக்களுக்கு மின்சாரம் அதிக அளவில் கொடுக்க முடியும்.
கடலில் வீணாக சென்று அடையும் மழை நீரை சரியான முறையில் சேமிக்க திட்டங்கள் வகுக்கப் பட வேண்டும்.
இலவச மடிக்கணினி களுக்குப் பதிலாக இந்தியாவில் தயாராகும் குறைந்த விலை டேபிலேட் என்று சொல்லப் படும் கணினிகளை வழங்கலாம்.
அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும்.
எல்லோருக்கும் இருப்பிடங்களின் அருகிலேயே அரசின் மருத்துவமனைகள் இருக்கும்படி செய்ய வேண்டும்.

Wednesday, January 4, 2012

வாழ்த்துக்கள்

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Saturday, December 10, 2011

சமச்சீர் கல்வி

சென்னையில் மேற்கு மாம்பலத்தில் சக்கரபாணித் தெருவில் அமைந்துள்ள கலா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ள உள்ளது.
காரணங்கள் தமிழக அரசு, மற்றும் அரசியல் வாதிகளின் தேவை இல்லாத செயல் பாடுகள்.
தமிழக அரசு தனது போக்குவரத்துக் கழகம், ஆவின், மின்சாரவாரியம் இவற்றின் தேவை மக்களுக்குத் தொடர்ந்து கிடைக்க விலைகளை உயர்த்தி உள்ளது போலவே, பள்ளிகளும் நியாயமான அளவு கட்டணங்கள் வசூலிக்க அனுமதிக்க வேண்டும். சிறந்த அளவில் இந்தப் பகுதியில் கல்விக்காக 26 வருடங்களாக சேவை புரிந்து வரும் ஒரு அறக் கட்டளை இது.
ராமகிருஷ்ண மிஷனின் பள்ளியை விட குறைந்த கட்டணம் வாங்கும் பள்ளி இது.
ஆனாலும் தமிழக அரசு தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரே அளவாக கட்டணங்கள் பெறச் சொன்னால் எவ்வாறு பள்ளியின் மற்ற செலவுகளை சமாளிப்பது?
அரசாங்கம் வெறும் கண்துடைப்பாக காரியங்களை செய்யக் கூடாது.

Thursday, December 8, 2011

விலைவாசி

விலைவாசி உயர்வை மட்டுமே பேசுகின்ற அனைவருமே அரசு குறிப்பாக மத்திய அரசு உலகம் முழுவதும் பதுக்கி வைக்கப் பட்டுள்ள இந்தியர்களின் பணத்தை திரும்பக் கொண்டு வர எந்த முயற்சியும் செய்யவில்லை.
ஒரு நண்பரிடம் வெளிநாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் அனுமதிப்பதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும்போது இந்தியாவில் ஏற்பட்ட வெண்மைப் புரட்சி, பசுமை புரட்சிகளைப் பற்றி குறிப்பிட்டார். அரசாங்கங்கள் விவசாயிகளுக்கு சரியான பாதுகாப்பு அளிக்க வேண்டும். விவசாயிகளின் பொருள்களுக்கு சரியான விலை கிடைக்க செய்ய வேண்டும்.
அவர்களின் விளை பொருள்கள் வீணாகாமல் தடுக்க வேண்டும்.

Friday, September 30, 2011

பூமி பூஜை

பூமி பூஜை.
http://www.scribd.com/doc/66947791

வாஸ்து பூஜை

வாஸ்து பூஜை.
http://www.scribd.com/doc/66947538