Thursday, April 1, 2010

பிரார்த்தனை பலித்தது!

பிரார்த்தனை பலித்தது
இறைவனிடம் நான் மிகுந்த பலம் வேண்டுமென்று கேட்டேன்!
அவர் எனக்கு சில கஷ்டங்களை உண்டாக்கி என்னைப் பலமுள்ளவனாக்கினார்!
மிகுந்த அறிவாற்றல் வேண்டுமென்று கேட்டேன்!
பல பிரச்சினைகளை உண்டாக்கி அவற்றினை தீர்க்கும் வாய்ப்பினையும் உருவாக்கித் தந்தார்!
குறையாத வளமைகள் வேண்டுமென்று கேட்டேன்!
தளராமல் உழைப்பதற்கு ஆற்றல் மிகு மூளையைத் தந்தார் இறைவன்!
அஞ்சா நெஞ்சம் வேண்டுமென்று பிரார்த்தித்தேன்!
ஆபத்துகளை உருவாக்கி அவற்றைக் கடக்கும் திறமையைத் தந்தார்!
அன்பு வேண்டுமென்று வேண்டினேன்!
துன்பத்தில் உழலும் மக்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பினைத் தந்தார்!
நான் பல சலுகைகளைக் கேட்டேன்!
அவர் பல வாய்ப்புகளைத் தந்தார்!
நான் விரும்பிக்கேட்டது எதையும் பெறவில்லை!
ஆனால் என் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டன!
என் பிரார்த்தனை பலித்தது!


இது என்னால் எழுதப்படவில்லை! எழுதியவருக்கு நன்றிகள்!

3 comments:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  2. இந்த ப்ரார்தனை பலித்தது என்ற பதிவில் தாங்கள் இட்டதை ஏற்கனவே விருத்தாசலம் டாக்டர் குலோத்துங்கன் அவர்களின் மணிவிழா மலரில் வெளிவந்துள்ளது.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி!
    தகவலுக்கும் நன்றி!

    ReplyDelete