Thursday, April 7, 2011

சக்தி சுரபி

தற்போது தான் சொல்வனம் என்ற இணைய இதழில் சக்தி சுரபி என்ற இயற்கை எரிவாயு வீடுகளுக்கு பயன் படுத்தும் படியாக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்திலிருந்து அங்கு அருகாமையில் உள்ள மக்களுக்கு அறிமுகம் செய்து இருக்கிறார்கள். இதை அவர்கள் செய்து பல வருடங்கள் ஆகிறது. இப்போது தான் தெரிந்து கொள்ள முடிந்தது. சாண எரிவாயு அல்ல இது, காய்கறிக் கழிவுகளை இதற்கு பயன் படுத்துகிறார்கள். இதை படிப்பவர்கள் சொல்வனத்தில் சென்று பார்த்து பயன் பெறுமாறும், தெரிந்தவர்கள் பயன் படக் கூடியவர்களிடமும் இதை சொல்ல வேண்டுகிறேன். இனிமேல் வரக் கூடிய காலங்களில் எரிவாயுவிற்கான மானியம் குறைந்து விலைகள் அதிகமாகும் முன்னாலேயே நம்மால் முடிந்த அளவு செயல் பட வேண்டும்! சிறு நகரங்களில் தனி வீடுகளில் வசிக்கும் மக்கள், பெரு நகரங்களில் குழுவாக தனி வீடுகளில் வசிக்கும் மக்களும் இதை நன்றாக பயன் படுத்த முடியும்! அரசுகளை குறை சொல்வதை குறைத்துக் கொண்டு நம்மால் முடிந்த அளவு இயற்கைக்கு இசைந்த அளவு வாழப் பழக வேண்டும்!

No comments:

Post a Comment