Thursday, October 12, 2017

புஷ்கரம்

புஷ்கரம் என்பது ப்ரஹ்மாவின் கமண்டலுவில் உள்ள தேவதையாகும். தேவகுரு ப்ருஹஸ்பதியானவர் ப்ரஹ்மாவை நோக்கித் தவமிருந்து புஷ்கரத்தைத் தனக்குத் தருமாறு வேண்டினார். புஷ்கர தேவதையானவர் தான் ப்ருஹஸ்பதியுடன் செல்லமுடியாது என்றும் ப்ருஹஸ்பதி இருக்கும் ராசிகளுக்குரிய நதிகளில் தான் வசிப்பதாகவும் சொன்னார். அதன்படியே ப்ருஹஸ்பதி (குரு) எந்த ராசிகளில் உள்ளாரோ அந்தந்த ராசிகளுக்குரிய நதிகளில் நடத்தப்படுவதே புஷ்கர விழாவாகும்.  

அடையாளமாக 12 ராசிகள், 12 வருடங்களுக்கொருமுறை வருவதால் 12 நாள்கள் நடத்துகிறார்கள். ப்ருஹஸ்பதி அந்த ராசியில் உள்ள வரை புஷ்கர பலன் இருக்கும். 

No comments:

Post a Comment