Wednesday, August 31, 2011

அரசு

எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் சமீபத்தில் குற்றாலம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த கருணாநிதியின் ஆட்சிக் காலத்தின் நானும் என் நண்பரும் காஞ்சிபுரம் சென்று இருந்தோம். அப்போது கழிவறையை உபயோகிக்க 4 ரூபாய்கள் கட்டணமாக கேட்டார்கள். அது மட்டுமல்ல கழிவறைகள் சரியான பராமரிப்புகள் இல்லாமலேயே இருந்தன. அதைப் போலவே தற்பொழுதும் குற்றாலத்தில் கழிவறையை உபயோகிக்க 5 ரூபாய்கள் கேட்டார்கள். என்னமோ எதற்கு எடுத்தாலும் விலை வாசி ஏறி விட்டது என்பதாக நாம் சொல்லுகிறோம். ஆனால் கழிவறையை சரியாக பராமரிக்காமலேயே அதற்கு கட்டணம் வசூலிப்பது என்ன நியாயம். அரசு சிந்திக்குமா?

No comments:

Post a Comment