Wednesday, October 10, 2012

ஷண்ணவதி ஸ்ராத்தங்கள்

ஷண்ணவதி ஸ்ராத்தங்கள்
எல்லாம் வல்ல ஸத்குரு மூர்த்தியின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
ஒரு வருடத்தில் 96 தடவை ஸ்ராத்தங்கள் ஹிரண்ய ரூபமாக செய்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இது விசேஷமாக செய்ய முடிந்தவர்கள் செய்யலாம். எனவே அதைப் பற்றிக் குறிப்பு மட்டும் எழுதப் படுகிறது.
தமிழ் மாதங்களை வைத்து இந்தக் குறிப்பு எழுதுகிறோம்.
பன்னிரண்டு மாதங்களின் மாதப்பிறப்பு - பன்னிரண்டு ,
அமாவாசை - பன்னிரண்டு, அஷ்டகை -பன்னிரண்டு,
வ்யதீபாதம் - பதிமூன்று , வைத்ருதி -  பதிமூன்று ,
மன்வாதி - பதினான்கு, யுகாதி - நான்கு, மஹாளயம் - பதினாறு.

அஷ்டகைகள்  என்பது - மார்கழி மாதத்திலிருந்து பங்குனி மாதம் வரை உள்ள மாதங்களில் வரும் கிருஷ்ண பக்ஷ ஸப்தமி ( திஸ்ரோஷ்டகை ),
கிருஷ்ண பக்ஷ அஷ்டமி ( அஷ்டகா ),  கிருஷ்ண பக்ஷநவமி ( அன்வஷ்டகா ) இவையே.




No comments:

Post a Comment