Friday, October 19, 2012

சிவசைலம்

சிவசைலம்
எல்லாம் வல்ல ஸ த் குரு மூர்த்தியின் திருவருளால் சிவசைலம் என்ற திருத்தலத்தைப் பற்றி எழுத நினைக்கிறேன். முழுமை அடைய கணபதியைப் பணிகின்றேன்.


சிவசைலபதியையும் பரம கல்யாணி நாயகியையும் அழகிய
ஸ்நேக புரத்தையும் கடநா  நதியையும் வணங்குகின்றேன்.
அத்ரி மஹ ரிஷியால் பூஜை செய்யப்பட்டவரும் மங்களத்தைச் செய்பவரும் பக்தர்களின் கோரிக்கைகளை நன்றாய் பூர்த்தி செய்கின்றவரும் பதினாறு ஆவடையாளுடன் கூடியவருமாகிய சிவசைல பதியை நமஸ்கரிக்கின்றேன்.
நான்கு கைகளுடன் கூடியவளும் விசாலமான நேத்திரங்களுடன் கூடியவளும் செம்பரத்தை புஷ்பத்திற்கு சமமான சோபையுடையவளும் ஆகிய பரம கல்யாணியை சப்தார்த்தங்கள் நன்கு விளங்குவதன் பொருட்டு நமஸ்கரிக்கின்றேன்.



 

No comments:

Post a Comment