Tuesday, August 3, 2010

யமுனோத்ரி

ஹரித்வாரில் இருந்து காலை 9 மணியளவில் புறப்பட்டு raiwala , டேஹ்ரடுன், முசௌரி ,பர்கோட் வழியாக ராணாசட்டி என்ற இடத்தை மாலை 7 மணியளவில் அடைந்தோம்! வழியில் முசௌரியில் ஆப்பிள், பேரிக்காய், பிஸ்கட், மாத்திரைகள் வாங்கிக் கொண்டோம். விடுதியில் தங்கி இரவு சாப்பிட்டு உறங்கினோம். இரவு நல்ல மழை, காலையிலும் தொடர்ந்தது! இருப்பினும் மழை கோட் 15 ரூபாய்க்கு கிடைத்ததை வாங்கிக் கொண்டு 6 மணியளவில் கிளம்பினோம்! ஹனுமான் சட்டி என்ற இடத்தைக் கடந்து செல்லும்போது மழையால் மலையில் சரிவு ஏற்பட்டு மண் நெகிழ்வு வேறு ஏற்பட்டிருந்தது. பல வாகனங்களின் ஓட்டுனர்களின் முயற்சியால் போக்குவரத்து தொடங்கியது. ஜானகி சட்டி என்ற இடத்தை 8 மணியளவில் அடைந்தோம். இங்கிருந்து 7 கி.மீ. நடையாகவோ, குதிரையிலோ. டோலி மூலமாகவோ தான் யமுனோத்ரியை அடைய முடியும். செங்குத்தான மலைப் பாதையில் 5 கி.மீ. வரை நடந்தும் 2 கி.மீ. வரை குதிரையிலுமாக யமுனோத்ரியை அடைந்து அங்கு உள்ள வெந்நீர் குண்டத்தில் ஸ்நானம் செய்து யமுனோத்ரி கோவிலில் தரிசனம் செய்து மதியம் 2 மணியளவில் மீண்டும் ஜானகி சட்டியை அடைந்து சாப்பிட்டு எல்லோரும் வருவதற்காக காத்திருந்து மாலை 4 ,மணியளவில் கிளம்பி இரவு 10 மணியளவில் மாடலி என்ற இடத்தில் இரவு தங்கினோம்!

No comments:

Post a Comment