Saturday, August 14, 2010

பத்ரிநாத்

பத்ரிநாத்
ஜூலை 21 ம் தேதி காலை 7 மணிக்கு புறப்பட்டு த்ரியுக் நாராயணன் என்ற இடத்தில் தரிசனம் செய்தோம். இங்கு த்ரேதா யுகம். த்வாபரயுகம், கலியுகம் மூன்று யுகங்களிலும் விஷ்ணு இங்கே இருப்பதால் த்ரியுக் நாராயணன் என்ற பெயர். இங்கு சிவன் பார்வதி கல்யாணத்தில் இருந்த அக்னி இருக்கிறது. பிரம்ம குண்டம், ருத்ர குண்டம், விஷ்ணு குண்டம், சரஸ்வதி குண்டம் என்ற நான்கு குண்டங்கள் உள்ளன. இவற்றில் பிரம்ம, ருத்ர குண்டங்களில் ஸ்நானமும் விஷ்ணு குண்டத்தில் ஆசமனமும் சரஸ்வதி குண்டத்தில் தர்ப்பணமும் செய்ய வேண்டுமாம். விஷ்ணு, லக்ஷ்மி, சரஸ்வதி தரிசனம் செய்து புறப்பட்டு கேதார் நாத் சுவாமி பனிக் காலங்களில் இருக்கும் இடமான ஓம்காரேஸ்வர் ( ஊகிமத்) என்று சொல்கிறார்கள், தரிசனம் செய்து மாலை 5 .30 மணியளவில் மாயாபூர் என்ற இடத்தில் இரவு தங்கினோம். ஜூலை 22 காலை 4 மணிக்கு கிளம்பி ஜோஷிமட் வழியாக 8 மணிக்கு பத்ரிநாத்தை அடைந்து வெந்நீர் குண்டங்களில் குளித்து பத்ரிநாதரை தரிசனம் செய்தோம்.

No comments:

Post a Comment