Saturday, August 14, 2010

கேதார்நாத்

கேதார்நாத்
ஜூலை 19 ம் தேதி காலை 6 மணிக்கு நேதாலாவிலிருந்து புறப்பட்டு உத்தரகாசி என்ற இடத்தில் சிவன் கோவிலில் தரிசனம் செய்தோம். மாலை 6 மணிக்கு குப்த காசி என்ற இடத்தில் சிவன் கோவிலை தரிசனம் செய்தோம். முன்பு சிவன் காசியில் காணப் படாமல் இங்கு காணப் பட்டதால் இந்த இடத்திற்கு குப்த காசி என்று பெயர். இந்த இடத்தில் கங்கையும் யமுனையும் இரண்டு கோமுகிகள் வழியாக வருகின்றன. மாலை 7 .30 மணிக்கு ராம்பூர் என்ற இடத்தை அடைந்து இரவு தங்கினோம். ஜூலை 20 ம் தேதி காலை 5 .30 மணிக்கு கிளம்பி கௌரி குண்டம் என்ற இடத்தில் வெந்நீர் குண்டத்தில் குளித்து 14 கி. மீ. நடந்து 11 .30 மணிக்கு கேதார் நாத்தை சென்று அடைந்தோம். மந்தாகினி நதியில் ப்ரோக்ஷித்துக் கொண்டு கேதார் நாத்தில் தரிசனம் செய்து மீண்டும் நடந்து கௌரி குண்டத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து அடைந்து இரவு 8 மணியளவில் ராம்பூர் சென்று அடைந்தோம்.

No comments:

Post a Comment