Tuesday, July 3, 2012

தாம்ரபரணி -1

தாம்ரபரணி -1
தக்ஷ பிரஜாபதியின் புதல்வியாக இருந்த தாக்ஷாயணி தக்ஷன் செய்த சிவ அபராதத்தால் தக்ஷ யாகத்தில் சரீரத் த்யாகம் செய்தாள். மறுபடியும் ஹிமவானின் மகளாக பார்வதியாக அவதாரம் செய்து பரமேஸ்வரனை மணம் செய்யும் பொருட்டு ஸ்ரீ புர  தேவியான பரா சக்தியை  இடைவிடாது ஆராதனை செய்து வரும்போது  பராசக்தி அம்பிகை முன் தோன்றி ஒரு தாமிரை புஷ்ப மாலையை கொடுத்து அந்த மாலையால் உலக நன்மை ஏற்படும் என்று வாழ்த்தி அருளினாள். பின்னர் பார்வதி கல்யாண வைபவம் தொடங்கியது.
அதைக் காண அகஸ்திய முனிவரும் தன்  பத்தினியான லோபாமுத்திரையுடன் வந்திருந்தார். உலகம் முழுவதும் அங்கே  கூடி இருந்ததால் தென் திசை உயர்ந்தது.

No comments:

Post a Comment