Wednesday, July 4, 2012

தாம்ரபரணி - 2

தாம்ரபரணி - 2
 உடனே சிவபெருமான் உலகச் சமன் செய்யும் பொருட்டு அகஸ்திய முனிவரையும் லோபாமுதிரையையும் தென் திசை செல்லுமாறு பணித்து கல்யாண கோலத்தை அங்கே காணலாம் என்றும் உறுதி அளித்தார்.
முன்பு பராசக்தியால் அளிக்கப் பட்டதும், திருமண வைபவத்தில் பார்வதியால் தோள் மாலையாக அணிவிக்கப் பட்டதுமான தாமிரை மாலையை சிவன் அகஸ்தியரிடம் அளித்தார்.
அந்த மாலையை அகஸ்தியர் பெற்றுக் கொண்டதும், அது ஒரு பெண்ணாக மாறியது. அங்கு கூடியிருந்த தேவர்கள் பூமாரி பெய்து, தாமிரை மாலையிலிருந்து தோன்றியதால் தாமிரைபர்ணி என்றும் நல்ல அருண சிவந்த வர்ணமுள்ளதால் தாம்ரபர்ணி என்றும் பலவாறு புகழ்ந்து போற்றினர்.
மேலும் அந்த தாம்ரபர்ணி  தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும் உரிய காலத்தில் நதி உருவம் பெற்று சிறந்த மேன்மையை உண்டாக்குவாள்  என்றும் ஈஸ்வரன் அருளிச் செய்து அவளையும் தென் திசைக்கு அழைத்து செல்லுமாறு அகஸ்தியருக்கு உத்தரவிட்டார்.
அகஸ்தியரும் சிவனை வலம்  வந்து கைலாச பர்வதத்திலிருந்து  புறப்பட்டு மலைய பர்வதம் என்னும் பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.
அங்கு மலைய பர்வத ராஜன் தனது மனைவி நந்த தேவியுடன் சிறப்பாக வரவேற்று பூஜைகள் செய்தான். முனிவரின் உத்தரவுப்படி தாம்ரபர்ணி தேவியை தன் புத்திரியாக ஸ்வீகாரம் செய்து கொண்டு வளர்த்து வந்தான்.

 

No comments:

Post a Comment