Wednesday, July 4, 2012

தாம்ரபரணி - 4

தாம்ரபரணி - 4
தாம்ரபரணியில் தீர்த்த யாத்திரை
தாம்ரபர்ணி நதியானவள் பொதிகை மலையிலுள்ள குப்த ஸ்ருங்கம் எனப்படும் கொடுமுடியிலிருக்கும் குஹையிலிருந்து உற்பத்தியாகி
முதலில் பூர்வ வாகினியாக ( கிழக்கு  திசையில் ) பாய்ந்து கலம்பகர்த்தம் என்று அழைக்கப் படும் பெரிய தடாகத்தில் அருவியாக விழுகிறாள்.
இந்த  கலம்பகர்த்தம் தான் புகழ் பெற்ற பாண  தீர்த்தம் ஆகும்.
இதன் பெயர் காரணத்திற்கு ஒரு புராண வரலாறு உண்டு.
முற்காலத்தில் த்ரிபுரர்கள் என்னும் கொடிய அசுரர்களால் உலகம் துன்புற்ற பொழுது பரமேஸ்வரன் மிகவும் கோபம் கொண்டு பூமியை ரதமாகவும் பிரம்மாவை சாரதியாகவும்  மேரு மலையை வில்லாகவும் விஷ்ணுவைப் பாணமாகவும் தரித்து அவர்களை வதம்  செய்தார். திரிபுர சம்ஹாரம் ஆன  பின்னும் பாணத்தின் கோபாக்னி குறையாமல் தகித்துக் கொண்டு இருந்ததால் ருத்ர மூர்த்தியானவர் அதை உஷ்ண சமனத்திற்காக கலம்பகர்த்த தடாகக் குழியில் வைத்தார்.
அந்தக் குழியில் மிகுந்த வெப்பத்துடன் ஜொலித்துக் கொண்டிருந்த பாணத்தின் மீது பெரும் வெள்ளமாக தாம்ரபர்ணி தேவியானவள் பாய்ந்து அதன் தாபத்தை தீர்த்தாள். ஸ்ரீ நாராயணன் பாண ரூபம் பெற்று தாம்ரபர்ணியால் ஆராதிக்கப் பட்டதால் பாண தீர்த்தம் என்று புகழ் பெற்றது.
இந்த பாண  தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணுவோர் ஸ்ரீ நாராயணனுடைய அருளைப் பெறுகின்றனர் என்றும் பிரயாகை முதலான பற்பல புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் தங்களின் சுத்திக்காக ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் இங்கு வருகின்றன, என்றும் ஹயக்ரீவ முனிவரின் வாக்காக தாம்ரபர்ணி மாஹாத்மியம் கூறுகிறது.
 

No comments:

Post a Comment