Tuesday, March 31, 2020

சிவ வாக்கியர் பாடல்


சிவ வாக்கியர் பாடல்

ஓம் நம:சிவாய ஓம் ஓம்நம:சிவாய
ஓம் நம:சிவாய ஓம் ஓம்நம:சிவாய

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.
(ஓம்நம:சிவாய)
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.
(ஓம்நம:சிவாய)
நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராம ராம ராம என்ற நாமமே.
(ஓம்நம:சிவாய)
அஞ்செழுத்தில் பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்து கூற வல்லீரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.
(ஓம்நம:சிவாய)
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூலமான் மழு
எடுத்த பாத நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காணவல்லரோ.
(ஓம்நம:சிவாய)
உருவம் அல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாகி நின்ற நேர்மை யாவர் காணவல்லரே.
(ஓம்நம:சிவாய)
மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எண் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே.
(ஓம்நம:சிவாய)
ஆனவஞ் செழுத்துளே எண்டமும் அகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவலுற்றதே.
(ஓம்நம:சிவாய)
நினைப்பதொன்று கண்டிலேன் நியலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அநாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே.
(ஓம்நம:சிவாய)
பண்டு நான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாதிலே செபித்து விட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை.
(ஓம்நம:சிவாய)
அம்பலத்தை அம்பு கொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கு என்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செம்பொன்னப்பலவூதுள்ளே தெளிந்து சிவாயமே.
(ஓம்நம:சிவாய)
அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாம் மர்ந்ததே சிவாயமே.
(ஓம்நம:சிவாய)
மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம்
ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லை
(ஓம்நம:சிவாய)
நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புராணமான மாய்கையை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள் இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே.
(ஓம்நம:சிவாய)
இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டோர் இனி பிறப்பிதிங்கில்லையே.
(ஓம்நம:சிவாய)
கார கார கார காவல் ஊழி காவலன்
போர் போர் போர் போர் போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ
ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே.
(ஓம்நம:சிவாய)
விண்ணிலுள்ள தேவர்கள்  அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான்
மண்ணில் பிறப்பறத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே.
(ஓம்நம:சிவாய)
அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
மகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே.
(ஓம்நம:சிவாய)
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தன்மஒஇயான மந்திரம் சமைந்த ரூபமாகிய
வெண்மையான மந்திரம் விளந்து நீறதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே.
(ஓம்நம:சிவாய)
ஓம்நம:சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம்நம:சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம்நம:சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம்நம:சிவாயமே உட்கலந்து நிற்குமே.
(ஓம்நம:சிவாய)

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

                         

No comments:

Post a Comment