Monday, March 9, 2020

ஸ்ரீநாமாஜி (ஸ்வாமிநாமானந்தகிரி)திருப்பள்ளியெழுச்சி


ஸ்ரீநாமாஜி திருப்பள்ளியெழுச்சி

பள்ளி எழுந்தருள்வாய் குருநாதா – எங்கள்
பிறவிப்பிணி தீர பரமன் அடிகாண
பள்ளி எழுந்தருள்வாய் குருநாதா – எங்கள்
பிறவிப்பிணி தீர பரமன் அடிகாண

ப்ரஹ்மமாய் விளங்கும் பரஞ்ஜோதியே – எங்கள்
வினைகளைப் போக்கிடுவாய் அருட்ஜோதியே
அஞ்ஞானத்திரை அகற்றி ஆன்மலயம் தரவே
தரணியம்பதியே நீ எழுந்தருள்வாயே!

பவக்கடலில் வீழ்ந்து வாடிநிற்கும் எங்களைத்
தடுத்தாட்கொண்டருள வந்தவனே – உந்தன்
திருவடி நிழலையே பற்றி நிற்கும் – எங்களை
உய்வித்தருளவே எழுந்தருள்வாயே!

அகந்தையினால் நாங்கள் மதியிழந்தே உலகில்
அல்லும் பகலும் அல்லலுற்றோம் – ஞான
விந்தைபுரிந்து சிந்தை தெளியப்பெற
தயையுடனே பள்ளி எழுந்தருள்வாயே!

நாமமே கதியென்று உரைத்திட்டவா – எங்கள்
கலியை நீக்கும் வழிக்கு வித்திட்டவா
ஞான ஸ்வரூபனே (ஸ்வாமி)நாமானந்தா உந்தன்
த்யானம் நீக்கியே பள்ளி எழுந்தருள்வாயே!

No comments:

Post a Comment