Monday, March 9, 2020

ஞானானந்த மங்களம்


ஞானானந்த மங்களம்
வாழ்க சுயம்பிரகாசம் வாழ்க வாழ்கவே
சூழ்க சுத்தாத்ம சக்தி சூழ்கவே

ஏழுலோகம் ஜீவன்முக்தி இன்பம் பொங்கவே
இதயமாகும் இறைவனாகி எல்லாம் ஓங்கவே

பாழ்மன அகந்தை வாழ்வு பாழ்பட்டொழியவே
பரமசச்சிதானந்தாத்ம பால் பொழியவே

தட்டில்லாத நித்யஜீவ தத்வமோங்கவே
தன்மயத்தில் சின்மயம் தழைத்திலங்கவே

எட்டுதிக்கும் ஹம்ஸ ஸோஹம் எதிரொலிக்கவே
எல்லாம் ப்ரஹ்மம் என்னும் உண்மை இறைவகிக்கவே

வாழ்க சுயம்ப்ரகாசம் வாழ்க வாழ்கவே
சூழ்க சுத்தாத்ம சக்தி சூழ்க சூழ்கவே.


எல்லோரும் நன்றாய் இருக்க வேண்டும் – இதற்கு
ஈசன் கணேசன் அருளல் வேண்டும்.
எல்லோரும் ஒன்றாய் இருக்க வேண்டும் – இதற்கு
ஈசன் கிரீசன் அருளல் வேண்டும்.




மந்தஸ்மித முகாம்போஜம் மஹனீய குணார்ணவம்
மதுரா பாஷிதம் சாந்தம் ஸர்வபூத தயாபரம்
பக்த வாத்ஸல்ய ஜலதிம் பரமானந்த விக்ரஹம்
ஞானானந்தம் ப்ரபன்னோஸ்மி நிர்மல ஞான ஸித்தயே.

ஓம் ஞானானந்தம் ஞானானந்தம் ஞானானந்தம்.



ஓம் ஸர்வக்ஞ மூர்த்தி கி                                -  ஜெய்
ஜெய போல் ஸத்குருநாத் மஹராஜ் கி       -  ஜெய்
ஸத்குருஞானானானந்த மூர்த்தி கி           -  ஜெய்
ஸ்வாமி ஹரிதாஸ்கிரி மஹராஜ் கி           -  ஜெய்
ஸ்வாமி நாமானந்த கிரி மஹராஜ் கி        -  ஜெய்
ஜெய போல் ஸத்குரு சரணாரவிந்த கி     -  ஜெய்
ப்ரஹ்மைவ ஸத்யம்                                         - ஓம்

ராதே க்ருஷ்ணா! ராதே க்ருஷ்ணா! ராதே க்ருஷ்ணா!

No comments:

Post a Comment