Monday, March 9, 2020

ஸ்ரீஞானஸ்கந்தர் திருப்புகழ்


ஸ்ரீஞானஸ்கந்தர் திருப்புகழ்

மாணா உடலினை மாண்பின தென நிதம்
மயங்கிவீழ் பவக்கடல் – மலமூழ்கி
வானாரரும்பொருள் வண்டமிழ்ச் சந்தத்தால்
வாழ்வுற இசைக்கிலேன் - மயலோடே

தேனார் மொழியினார் திருவெனப் புவியெனத்
தினந்தினம் கிடந்தலை – சிறு நாயேன்
தீநாய் வழிகெடுத் திருளற வொளிகொடுத்
திந்திரியம் அடக்கிய – பரமேலாம்

காணா ஒருபொருள் கானரு முயற்சியைக்
கைக்கொள அருள்வதும் – ஒருநாளே
கல்லால் நிழல்மலை வில்லார் அருளிய
காங்கேயனே – திருமுருகோனே

நாணாள் உய அருள் ஞானானந்தர் உறை
ஞானானந்தபுரி யுறைவோனே
ஞானாமுதந்தரு ஞானாதிபசிவ
ஞானாதித குக பெருமானே

ஞானாமுதந்தரு ஞானாதிபசிவ
ஞானாதித குக பெருமானே

No comments:

Post a Comment